Thursday, December 23, 2010

எல்லைக் கோடுகள் மாறும் பாலஸ்தீனம் மலரும்

பாலஸ்தீனம்: இது யூதர்களுக்கு
புதைகுழி
முஸ்லிம்களுக்கு முகவரி.
பைத்துல் முகத்தஸ் அது
எங்கள் மூன்றாம் புனிதஸ்தலம்,
எதிர்கால பாலஸ்தீன நகரம்
ஒரு நாள்
எல்லைக் கோடுகள்
மாற்றியமைக்கப்படும்.
அகதிகளாய்
தேசத்தை தாண்டிய
நதிகளாய் வாழும்
பாலஸ்தீனர்களின்
கொடிகள் அங்கே பறக்கும்.
மேலும் படிக்க

தன்மானப் போரில் சுதந்திரம் மலரும்!

ஆப்கானியர்கள்
பிறவி போராளிகள்!
அவர்கள் நெருப்பையும்
எரிக்கும்
நெருப்புகள்.
எதிரிகளோடு
போராடுவதே
அவர்களது வாழ்க்கை!
அது, அடக்குமுறைக்கு
பணியாத
சுதந்திர வேட்கை!
எதிரிகளால்
வெடிகுண்டுகளை
வீச முடியும்.
இவர்களால்
வெடி மருந்துகளாகவே
மாற முடியும்.
பதுங்கு குழிகள்தான்
மேலும் படிக்க

நேரத்தை முறைப் படுத்துவோம்

நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்..

  1. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multi tasking) சமீபகாலங்களில், பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!
மேலும் படிக்க

Wednesday, December 22, 2010

மொபைல் போன்களால் உருவாகும் ‘நோமொபோபியா’!

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர்.
இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றையதலைமுறையினர் உள்ளனர்.
இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா.
மேலும் படிக்க

மாவீரன் மருத நாயகம்

சென்ற மாதத் தொடர்ச்சி... (பாகம்-1)

சென்ற மாதத் தொடர்ச்சி... (பாகம்-2)

சிவகங்கை சிக்கல்

ஆங்கிலேயர்களுக்கும் , மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது, இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்தை பெருக்க திட்டங்களை வகுத்தார்கள். குறுநில மன்னர்களை வளைத்தார்கள். அப்போது மருதநாயகத்துக்கு சவால் சிவகங்கையிலிருந்து உருவானது. மருதநாயகத்திற்கு கட்டுப்பட சிவகங்கை சமஸ்தானம் மறுத்தது. சிவகங்கை, திருபுவனம், பார்த்திபனூர் ஆகியவை தனக்குட்பட்டவை என்ற மருதநாயகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது, சிவகங்கையின் மன்னராக முத்து வடுகையர் இருந்தாலும், அவரை இயக்கி மறைமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்டவராயன் என்பவன்! அவன், ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இடையேயிருந்த பூசலை பயன்படுத்திக் கொண்டு, ஆற்காடு நவாபின் உதவியை பெற்றான்.

அவன் தந்திரத்தில் கெட்டிக்காரன். மருதநாயகத்தின் மனைவிக்கு பொன்னும் பொருளும் அனுப்புவதாக ஆசை வார்த்தை காட்டி, மருதநாயகத்தை சரிப்படுத்துமாறு தூதுவிட்டான். அரண்மனை வழியாக நுழைய முடியாதவன், அடுப்பங்கரை வழியாக நுழைய முயற்சித்தான். அதையும் மருதநாயகம் முறியடித்தார்.

சிவகங்கை மன்னர் முத்துவடுகையர், தனது தளபதியான தாண்டவராயனிடம், எதற்கப்பா... வம்பு! பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம்! என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர்! ஆனால் தாண்டவராயன் திருபுவனத்தில் ஆட்சியாளராக இருந்த தாமோதரனையும் அழைத்துக் கொண்டு ஆற்காடு நவாபுடன் கூட்டணி சேர்ந்தார்.
மேலும் படிக்க

Tuesday, December 21, 2010

இனிது, இனிது ஈமான் இனிது…

மூன்று விஷயங்கள் எவரிடம் உள்ளதோ அவர் ஈமானின் சுவையை பெற்றுக் கொண்டார்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏனைய அனைவரைவிடவும் அவருக்கு விருப்பத்திற்குரியவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு மனிதனை அல்லாஹ்வுக்காக நேசிக்க வேண்டும்
நெருப்பில் வீசப்படுவதை ஒருவன் எப்படி வெறுப்பானோ அதே போன்று குஃப்ர் (இறை மறுப்புக்கு) திரும்புவதை அவன் வெறுக்கவேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இம்மூன்று பண்புகளும் ஈமானியப் பண்புகளில் மிக உயர்ந்தவையாகும் அவற்றைப் பூரணப்படுத்துபவர் ஈமானின் இனிமையையும் சுவையையும் பெற்றுக் கொள்வார்.
மேலும் படிக்க

அலைபேசி அருமைகளும், அவலங்களும்…

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி லிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன், பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 27 ஆகிறது.
1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.
அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக்காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது.
மேலும் படிக்க

Monday, December 20, 2010

வரலாற்று பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடையாளமாக நாட்காட்டிகள் உள்ளன. அச்சமுதாயங்கள் பெருமைப் படக்கூடிய பல அர்த்தங்கள் அந்த நாட்காட்டிகளில் அடங்கியுள்ளன. மூஸா (அலை) அவர்களின் காலத்தை மதித்து அவர்களின் நபித்துவக் காலத்தில் இருந்து தமது நிகழ்வுகளுக்கு தேதியிட யூதர்கள் ஆரம்பித்ததும், ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைக் கண்ணியப்படுத்தி அதிலிருந்து தேதியிட கிருத்தவர்கள் ஆரம்பித்ததும் இதனால்தான். இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் தனது கொள்கை கோட்பாடுகளுடனும் நாகரீகத்துடனும் தொடர்புபடக் கூடிய அம்சங்களை கொண்டு, தமது நாட்காட்டிகளை நிர்ண யித்தனர்.
ஒரு சமூகம் பிற சமூகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் தாக்கத்தில் உள்ளாகும் போது ஆக்கிரமித்த சமூகங்களின் நாட்காட்டிகளை பின்பற்றியது வரலாறு கூறும் உண்மை. நாட்காட்டிகளின் இவ்வாறான முக்கியத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரீ காலண்டரைப் பின்பற்றுவது அவசியமாகின்றது. ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவது இஸ்லாமிய ஆளுமையின் சிறப்பு அடையாளமாகும்.
மேலும் படிக்க

புனித கஃபாவும், அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களும்

கஃபா குரைஷியரால் புனர் நிர்மானம்
குரைஷியரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய கஃபா வரலாற்றுச் சிறப்புமிக்கதோர் புனர் நிர்மானத்திற்கு உட்படுத்தப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் உனக்குத் தெரியுமா? உனது சமூகத்தவர்கள் (குரைஷியர்) கஃபாவைக் கட்டிய போது பொருளாதார நெருக்கடியால் இப்ராஹீம் (அலை) அவர்களின் அடித்தளைத்தைச் சுருக்கிவிட்டனர், உனது சமுதாயவத்தவர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த மக்களாக இல்லை என்றால் அதை இடித்துவிட்டு, நான் அதை இப்ராஹீம்(அலை) அவர்களின் சரியான அடித்தளத்தின் மீது கட்டி, ஆறுமுளம் அதிகப்படுத்தி, ஹிஜ்ரையும் கஃபாவினுள் கொண்டு வந்து, அதற்கு கிழக்கு மற்றும், மேற்கு வாசல்களையும் வைத்திருப்பேன் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸ் கஃபா சாதாரண ஒரு உயரத்தில் இருந்து வந்துள்ளதையும், இப்ராஹீம் நபியின் அடித்தளம் சுருக்கப்பட்டு கட்டப்பட்டதற்க பொருளாதாரத நெருக்கடி காரணம் என்பதையும் விளக்குகின்றது. அப்படியானால் அந்தப் பகுதி மக்கள் ‘ஹிஜ்ரு இஸ்மாயீல் என்றழைக்கும் ‘ஹிஜ்ர்’ என்ற அந்த வளைவு மூலை என்பது ஹதீஸ்களில் இருந்து புரிய முடிகிறது. அது பற்றிய செய்தி பின்னர் தரப்படும்.
மேலும் படிக்க

இமாம்களின் தியாக சுவடுகள்

அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றிருக்கும் நாம் அந்த மார்க்கத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மார்க்கம் எவ்வாறு நம்மை வந்தடைந்தது, இந்த மார்க்கத்திற்கும் நமக்கும் மத்தியிலுள்ள தொடர்புகள் எவ்வாறு அமையவேண்டும், என்பதையெல்லாம் நாம் புரிந்துக் கொண்டால் தான் இந்த மார்க்கத்தை முழுமையாக நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியும்.
மார்க்கத்தை நிலை நாட்டும் பொறுப்பு அல்லாஹ்வினுடையது:
இஸ்லாத்தை இந்த பூமியில் நிலை நாட்டுவதற்கும்; இஸ்லாமிய மார்க்கத்திற்கு வரும் அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் தவிடு பொடியாக்கி மார்க்கத்தை இந்த பூமியில் மேலோங்கச் செய்வதற்கும் உரிய மாபெரும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். ஆகவே அந்தப்பணிகளுக்கு ஏற்ற, தகுந்த மக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்பிக் கொண்டேயிருக் கின்றான்.
மேலும் படிக்க

ஹிஜ்ரி ஆண்டின் துவக்கம்: முஹர்ரம்

இப்பூமியில் வாழக்கூடிய மக்கள் காலத்தை கணக்கிடுவதற்கு பல்வேறு மாதங்களையும் நாட்களையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.
ஜனவரியை துவக்கமாக கொண்ட ஆங்கில வருடபிறப்பு, சித்திரையை துவக்கமாக கொண்ட தமிழ்வருட பிறப்பு போன்று பலவருடபிறப்புகள் நடைமுறையில் உள்ளன.
நபி(ஸல்) அவர்களது ஹிஜ்ரத்தை அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன. அனைவரிடத்திலும் ஓராண்டுக்கு 12 மாதங்கள் என்ற அளவிலேயே கணக்கிடப்படுகின்றன.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவு) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 9:36)
மேலும் படிக்க

பாபர் மஸ்ஜித் விவகாரம்: போராட்டங்கள் வலிமைப்படுத்தப்பட வேண்டும்

இந்திய ஒருமைப்பாட்டின் அடையாள சின்னங்களில் ஒன்றான பாபர் மஸ்ஜித். காவி பயங்கரவாதிகளால் இடித்து நொறுக்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்து விட்டது.
1992 டிசம்பர் 6 ஆம் நாள், அந்த கறுப்பு ஞாயிற்றுக்கிழமையில் நடந்து முடிந்த அந்த பயங்கரவாதம், இந்தியாவின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தி விட்டது.
இந்தியாவின் அரசியல் கண்ணியத்தையும், இந்தியர்களின் சகிப்புத்தன்மையையும் சர்வதேச அளவில் நிலைகுலைய வைத்த அந்நிகழ்வு, இன்று வரை அழியாத வரலாற்று கரையாக நிலைத்து விட்டது.
1924 ஆம் வருடம் உருவான ராஷ்பீரியம் சேவாசங்கம்தான் (ஆர்.எஸ்.எஸ்) காவி பயங்கவாதத்தின் தாய் மடியாக இன்று வரை மிரட்டி வருகிறது. காந்தியடிகளின் படுகொலையை முன்னின்று நடத்திய இவ்வியக்கம்தான், பாபர் மஸ்ஜித் தகர்ப்புக்கும் காரணமாக இருந்தது. அதன் ஆன்மீக பிரிவான விஸ்வ ஹிந்து பரிஷத் தும், அரசியில் பிரிவான பா.ஜ.கவும், வன்முறை, பிரிவான பஜ்ரங்தளமும் தான் பல்வேறு குறுக்கு வழிகளில் இச்சதி செயலை செய்து முடித்தன.மேலும் படிக்க

Thursday, December 16, 2010

புரோடொகால்: உலகளாவிய சதி

உலகை ஆள ஒரு சிறு கும்பல் சதி செய்கிறது. எப்படி உலகத்தின் அமைதியைக் குலைப்பது? எப்படிக் கலகங்களை உருவாக்குவது? எப்படி எப்போதும் ஒருவரோடு ஒருவரை மோத விடுவது? எப்படி சமுதாயத்தில் ஒழுக்கக் கேடுகளை விளைவிப்பது? வெளியே பார்க்க சாதாரணப் பிரச்சனைகளாகத் தோன்றக்கூடிய விஷயங்களெல்லாம் உண்மையில் மிகப்பெரிய சதியின் விளைவுகளே.
ஏன் கம்யூனிஸ்டுகள் கூடுகிறார்கள்? ஏன் இறை நம்பிக்கை குறைகிறது? இதற்கெல்லாம் பின்னால் ‘அவர்கள்’ இருக்கிறார்கள். ‘அவர்கள்’ ரகசியமாகக் கூடுகிறார்கள். நம்மையெல்லாம் அடிமைகளாக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இதுவரை வெறும் ஊகங்களாகப் பேசப்பட்டு வந்த இந்த விஷயத்துக்கு இதோ ஆவண ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.
‘அவர்கள்’ விரிவாக உருவாக்கிய சதித் திட்டத்தின் ஆவணங்கள் உலகப் பத்திரிகை வரலாற்றில் முதன்முதலாக!
மேலும் படிக்க

லண்டன்: டோனி பிளேரின் மைத்துனி இஸ்லாமானார்

பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இந்த லாரத் பூத். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். சமீபத் தில் ஈரான் சென்றிருந்த போது அங்கு இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமியராக மாறியுள்ளார்.
உலக அளவில் பிரபலமாகி வரும், ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார்.
அமெரிக்க, இங்கிலாந்து ஆதரவு சிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ் டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. லாரன் பூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.
மேலும் படிக்க

இஸ்லாம் ஃபோபியா பீதியில் மேற்குலம்

சாதாரண நாயைக்கண்டால் பேயைக்கண்டால் பயப்படும் வியாதினயப்போல் இஸ்லாம்போபியாவை அவ்வளவு சாதாரணமாக எடை போட முடியாது. உலக நாடுகளை குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க சக்திகளை அது படுத்தி எடுத்திருக்கிறது.
ஜெர்மனி
ஜெர்மனியும் இஸ்லாம் ஃபோபியாவெனும் மட சிந்தனையில் இருந்து தப்பவில்லை . மேற்கு ஐரோப்பா பரப்பில் மிக விழிப்புணர்வு நிரம்பிய நாடாக அறியப்பட்ட ஜெர்மனியிலும் வெறுப்புணர்வு வெறியாய் ஆடியதன் விளைவு மர்வா செர்பினி என்ற இளம் தாயின் உயிரை குடித்தது கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி இந்த இதயத்தை ரத்தம் வழியச்செய்யும் நிகழ்வு நடைபெற்றது.ஹிஜாப் அணியும் உரிமைக்காக தனது உயிரை அந்த இளம் பெண் தியாகம் செய்யவேண்டியதாயிற்று.
மேலும் படிக்க

மது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிராமம்!

மது, கந்துவட்டி, கல்லாமை என திசைக்கொரு தளைகளில் சிக்குண்டு, இருட்டில் தவித்த மக்களை மீட்டு, தங்கள் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றியிருக்கிறது அம்மாப்பட்டினம் பொதுநல இளைஞர் பேரவை.
பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் சற்று உள்ளடங்கிய கிராமம் அம்மாப்பட்டினம். ஊர் எல்லைகளில் வைக்கப்பட்டுள்ள ‘வட்டி தடை செய்யப்பட்ட கிராமம்’ என்ற அறிவிப்புப்பலகையே இக்கிராமத்தின் தனித்துவத்தை உணர்த்துகிறது. சுமார் 2000 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் பலருக்குத் தொழில் மளிகை வியாபாரம். மீனவர்கள், விவசாயிகளும் உண்டு.
“எல்லாருமே ஒரு காலத்தில் கடலை நம்பி பொழச்சவங்கதான். எங்கூர்ல இருந்து 12 கி.மீ தான் லங்கா. அந்தக்காலத்துல எங்க மூதாதைங்க, நம்மூர்ல மளிகைச் சாமான்களை வாங்கிட்டு படகுல போயி, லங்கா மலைத்தோட்டங்கள்ல வேலை செஞ்ச மக்கள் கிட்டவித்துவிட்டு வருவாங்க. 83ல நடந்த இனக்கலவரத்துக்குப் பெறவு, இந்த யாவாரம் முடங்கிப்போச்சு. அதுக்குப் பெறவு, தமிழ்நாட்டுல பல இடங்கள்ல மளிகைக்கடையை திறந்துட்டாங்க.
மேலும் படிக்க

Facebook – கிற்கு தடை

உலகப் புகழ்பெற்ற வோஸ்கஸ்வோகன் ( Volkswagen ) , ஹெயடல்பெர்க் சிமென்ட் (Heidelberg Cement) போன்ற மிக பெரிய ஜெர்மன் நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானில் ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்பட்டது, முஸ்லிம்களை பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும், முகமது நபியைப் பற்றி நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பதாகவும் கூறி பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டு இருந்தது. இதற்கு உலகம் முழுவதும் விமர்சனங்கள் எழுந்ததன. ஆனால் இன்று நாகரிக நாடாகவும், முழு கல்வி அறிவு பெற்ற ஜனநாயக நாடாகவும் கருதப்படும் ஜெர்மனியில் உலக முழுவதும் வியாபாரம் பரப்பியுள்ள முன்னணி நிறுவனங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மேலும் படிக்க

மாவீரன் மருத நாயகம்

மருதநாயகம் மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தில் பெரும் பகுதியை சுமார் 71/2 ஏழரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார். நான் போர்வீரன் மட்டுமல்ல… மிகச்சிறந்த ஆட்சியாளன் என்பதையும் தனது செயல்பாடுகளால் பதிவு செய்தார். அவரது ஆட்சியில்தான் தென்தமிழகம் பொதுப்பணித் துறையில் சிறப்பாக உருவாகியது.
ஆற்காடு நவாபின் கடும் எதிர்ப்பையும் மீறி 6.4.1756ல் மதுரை மண்டலத்தின் ஆட்சி நிர்வாகத்தை, ஆங்கிலேயர்கள் மருதநாயகத்திடம் வழங்கினார்கள். 1759ல் கவர்னர் பதவியை வழங்கினார்கள். தன்னம்பிக்கை இல்லாத ஆற்காடு நவாபை புறக்கணித்து, தன் மீது நம்பிக்கை வைத்த ஆங்கிலேயர்களை; தன் நிர்வாகத்திறனால் வியப்பில் ஆழ்த்தினார் மருதநாயகம்!
காவிரி காவலன்!
மக்களை காப்பதிலும் சரி, அவர்களின் எழிலார்ந்த வாழ்வை உயர்த்துவதிலும் சரி, மருதநாயகம் தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார். ஒருமுறை பிரெஞ்சுப் படைக்கு எதிராக போர் நடத்திக் கொண்டிருந்த போது, போரின் ஒரு திட்டமாக காவிரியாற்றின் கால்வாய்களையும், தடுப்பணைகளையும் உடைக்கும் பணியை பிரெஞ்சுப் படை செய்யத் துணிந்தது. இதன் மூலம் மருதநாயத்தின் படையை வெள்ளத்தில் மூழ்க செய்வது அவர்களின் திட்டம். இதை உளவு மூலம் அறிந்த மருதநாயகம், பிரெஞ்சுப் படையின் திட்டத்தை தவிடுபொடியாக்கினார். இதன் மூலம் தஞ்சை மண்டலத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றினார்.
மேலும் படிக்க

ஆபாச ஆடைகளுக்கு தடை!

உடல் அங்கங்களை வெளிப்படுத்தி ஆபாசத்தை உருவாக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்க இத்தாலியின் கடலோர நகரம் திட்டமிட்டுள்ளது. பொது சமூகத்தின் கண்ணியத்தை நிலை நிறுத்தவும், சமூக பாதுகாப்பிற்கும் இத்தகைய சட்டங்கள் உதவும் என காஸ்டெல்லாமர் டிஸ்டாபியா நகர மேயர் லூகிபோபியோ தெரிவிக்கிறார்.
நகரத்தின் அந்தஸ்தை நிலைநாட்டவும், குடிமக்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு மனோபாவத்தை உருவாக்கவும் இத்தகைய சட்டங்கள் தேவை எனவும் அவர் தெரிவிக்கிறார்.
சட்டத்தை மீறுபவர்களுக்கு 35 டாலரிலிருந்து 696 டாலர் வரை அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுஷீமீளது. இச்சட்டத்தின்படி நீளம் குறைந்த இறுக்கமான ஜீன்ஸ்கள் அணிய தடை விதிக்கப்படும். கடற்கரையில் குளிப்பது, கால்பந்து விளையாடுவது ஆகியவற்றையும் தடைச் செய்ய திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை வருகிற திங்கள்கிழமை கூடும் மாவட்ட கமிட்டி விவாதிக்கும். நகர மேயரின் தீர்மானத்திற்கு சமூக சேவகர்களும், மதத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது
சரியான நடவடிக்கை என மதப் புரோகிதர் டான் போலோ சிகர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க

Tuesday, December 14, 2010

அரஃபா பேருரையும், மனித உரிமைப் பிரகடனமும்!

அன்றைய அரபுலகில் உ ய ர் கு ல மா க போ ற் ற ப் ப ட் டு வ ந் த குரைஷிப் பரம்பரையில் அப்துல்லாஹ், ஆமினா என்ற தம்பதிகளுக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள். சி று வ ய திலேயே பெற்றோரை இழந்து, அநாதையான இவர்களை சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பொறுப்பேற்று வளர்த்தார்கள்.
நற்பண்புள்ளவர்களாக வளர்ந்து வந்த அவர்கள் நம்பிக்கையாளர், உண்மையாளர் என சிறப்புப் பெயர் கொண்டு மக்காவாசிகளால் அழைக்கப்பட்டார்கள். பல கடவுள் கொள்கை, பெண் சிசுக் கொலை, மது, மாது, சூது, நிற, இன, கோத்திர வெறி, தேசியவாதம், சாதியம், அதனால் தொடர் சண்டைகள் போன்ற தீமைகளுக்கு அடிமைகளாகவும் சகோதர வாஞ்சையற்ற எதிரிகளாகவும் வாழ்ந்து வந்த அவர்களுக்கு முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவ வருகை மகத்தான விடியலாய் அமைந்தது.
மக்காவில் 13 ஆண்டுகளாக கடும் எதிர்ப்புக்கும் தொல்லைகளுக்கும் மத்தியில் சீர்திருத்தக் கொள்கையை நிலைநாட்டிய முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கிருந்து சுமார் 450 கி.மீ தொலைவில் உள்ள மதீனாவில் முஸ்லிம்களை குடியமர்த்தினார்கள். தானும் குடியேறி, அங்கே இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள். ஆரம்பத்தில் அவர்களை எதிர்த்த மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்லாமிய ஆட்சியின் நன்னெறி கண்டு இஸ்லாத்தைத் தழுவலாயினர்.
மேலும் படிக்க

மாநபிகளாரின் மனப்பதிவுகள்

பெருமானார்(ஸல்) அவர்களின் கற்பித்தல் முறைகளில் சிலவற்றை சென்ற இதழ்களில் நாம் கண்டோம். அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக மேலும் சில முறைகளை இந்த இதழில் காண்போம்.
ஐந்தாவது முறை: போர்டுகள் மற்றும் வரைபடங்கள் மூலமாக விளக்குதல் பொதுவாக சிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்த வகுப்பறைக்கு செல்லும் போது, வரைபடங்கள் எடுத்துச் சென்று பாடங்களை விளக்குவார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களைத்தான் மாணவர்களும் சரி, பள்ளி நிர்வாகமும் சரி விரும்புகிறார்கள், நேரடியாக சொல்லும் போது புரியவே புரியாத சில சிக்கலான விஷயங்கள் வரைபடங்கள் மூலமாக விளக்கப்படும் போது எளிதில் புரிந்து விடும். வரைபடங்களை மட்டும் மனதில் வைத்துக் கொண்டாலே அனைத்தையும் சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். நவீன கால யுக்தியாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்தமுறை, பதிநான்கு நூற்றாண்டுக்கு முன்பே பெருமானார் (ஸல்) அவர்களால் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆச்சியத்திற்குரிய ஒன்று.
மேலும் படிக்க

Monday, December 13, 2010

குர்பானி சட்டங்கள்

இஸ்லாத்தில் இரண்டு பெருநாட்கள் உண்டு. ஒன்று நோன்பு பெருநாள், மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள். இந்த இரண்டு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாளில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாளில் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்தப் பலியிடுவது தான் குர்பானி.
குர்பானி கொடுக்கும் நாட்கள்:
குர்பானியை பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் யார்
தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பராஃ(ரலி) நூல்: புகாரி.
மேலும் படிக்க

புனித கஃபாவும், அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களும்…

கஃபா புனித மக்காவில் அமையப் பெற்றிருக்கின்ற காரணத்தாலும், புனித ஹரமைக் குறித்து நிற்பதாலும் இந்த தலைப்பினை கஅபா ஆலயம் பற்றியும், அதனோடு தொடர்பான அடையாளச் சின்னங்கள் பற்றியும் இங்கு காணவிருக்கின்றோம்.
கஃபாவின் அமைவிடம் : சவூதி அரேபியாவின் மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனித கஅபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இதை எகிப்து நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். இது பற்றி அறிஞர் ஜாகிர் நாயக் என்பவரும் தனது உரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மக்காவின் மறுபெயர்கள்:
இது மனிதர்கள் அல்லாஹ்வைத் தூய்மையாக வணங்கி, வழிபட பூமியில் நிறுவப்பட்ட முதலாவது ஆலயமாகும். இதன் சிறப்பைப் பிரதிபலிப்பதற்காக அது பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் வீடு, (நபிமொழிகள்),
அல்பைத்துல் அதீக், (அல்ஹஜ்:29, 33), பழமையான வீடு, புராதன வீடு.
அல்பைத், (அல்பகரா: 125, 127, 158), (ஆலுஇம்ரான்:97), (அல்அன்ஃபால்:35, அல்ஹஜ்:26), (குரைஷ்:3). குறிப்பாக அந்த இல்லம்.
அல்பைத்துல்ஹராம் (அல்மாயிதா, 97) சங்கையான இல்லம்.
அல்மஸ்ஜிதுல் ஹராம், (அல்பகரா: 144,149,150, 196), அல்மாயிதா:2, அல்அன்ஃபால்: 34, அத்தௌபா:7, 19, 28), (அல்இஸ்ரா:1, 7), அல்ஹஜ்: 25, அல்ஃபத்ஹ்: 25, 27).
அல்கஅபா, (அல்மாயிதா: 95, 97). நாட்சதுரமானது
அல்பலத், அல்பல்தா. இந்த ஊர்: (இப்ராஹீம், வச: 35, அந்நம்ல், வச: 91, அல்பலத், 1,2,
அல்பலதுல் அமீன், (அத்தீன், வச: 3), உம்முல்குரா, அல் அன்ஆம், 92, அஷ்ஷ¨ரா, வச:7.
குறிப்பு: கஅபதுல்லாஹ் என்ற சொல்லை நாம் உபயோகித்தாலும் அதை எந்த கலைக்களஞ்சியத்திலும் காணமுடியவில்லை.
மேலும் படிக்க

மன்மோகன் அரசின் ஏமாற்று வித்தை – ஆசிரியர் பக்கம்

வட்டியில்லாமல் இயங்கும் இஸ்லாமிய வங்கிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் இயங்குவது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கியிடம் கருத்து கேட்கப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் இஸ்லாமிய வங்கிகள் குறித்து இந்திய ஊடகங்களில் பரபரப்பாக செய்திகளும் வாசகர் கருத்து கணிப்புகளும் நடத்தப்பட்டுள்ளன. திரு. மன்மோகன் சிங் நமது நாட்டின் பிரதமர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் என்று அறியப்படக் கூடியவர். உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியகத்தில் (ஐ.எம்.எப்) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். மலேசியாவில் இஸ்லாமிய வங்கிகள் மிகப் பிரமாண்டமான முறையில் செயல்பட்டு வருவதாகவும் அவை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்த பிரதமர், ரிசர்வ் வங்கியிடம் இஸ்லாமிய வங்கிகளை இந்தியாவில் இயங்க அனுமதிப்பது குறித்து கருத்து கேட்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் 2004ல் மன்மோகன் சிங் பிரதமராக வந்த பிறகு வட்டியில்லாமல் இயங்கும் இஸ்லாமிய வங்கிகள் இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பல கோரிக்கைள் அவரிடம் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஆனந்த் சின்கா தலைமையில் இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாடுகள் பற்றி ஆய்வுச் செய்வதற்காக ஒரு செயல்பாட்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வட்டியின் அடிப்படையில் இயங்கும் பாரம்பரிய வங்கிகள் மற்றும் வட்டியில்லாமல் இயங்கும் மேலும் படிக்க

Thursday, December 9, 2010

அயோத்தியத் தீர்ப்பு இரண்டாவது கரசேவை?

அறுபதாண்டு கடந்து
அறிவிக்கப்பட்டது
‘அயோத்தியத் தீர்ப்பு’
(சில எழுத்துக்களை
மாற்றிப் படித்தாலும்
தவறில்லை)
நீதிமன்றத்தை
அவமதிப்பது
பெருங்குற்றம்
நீதிமன்றம்
நீதியை அவமதிப்பது…?
மேலும் படிக்க

மாநபி (ஸல்) அவர்களின் மனப் பதிவுகள்!

பெருமானார் (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறைகளில் இரண்டினை சென்ற இதழில் நாம் கண்டோம். அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக மேலும் இருமுறைகளை இந்த இதழில் நாம் காண்போம்.
கேள்விகள் மற்றும் விவாதங்கள் மூலமாக புரியவைத்தல்
ஒரு நல்ல ஆசிரியர் தான் நடத்தும் பாடத்தை முழுமையாக தனது மாணவர்களின் மனதில் பதிய வைப்பதற்கு பயன்படுத்த வேண்டிய பயனுள்ள முறை இது. ஒருதகவலை சாதாரணமாக தெரிவிப்பதை விட அது சம்பந்தமான கேள்விகள் மற்றும்விவாதங்களை எழுப்பி அந்தத் தகவலை தெரிவித்தால் அது நெஞ்சில் மறக்க முடியாத அளவுக்கு பதிந்து விடும். கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பி அந்த தகவல் தொடர்பான முழுமையான சிந்தனையைத் து£ண்டி விடுவதே இம்முறையின் நோக்கமாகும். இந்த முறையினை பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியிருப்பதையும் நாம் காண முடிகிறது. நாம் அனைவரும் அறிந்த மிகப் பிரபலமான ஒருசெய்தி….
மேலும் படிக்க

வட்டியில்லாத் திட்டத்தை நோக்கி…

அழகிய கடன் அறக்கட்டளை
ஒரு வருட கால தவணையில் கடன்!- JAQH மதுரை
திண்டுக்கலில் பைத்துல் மால்!
பள்ளிவாசல்கள் தோறும் பைத்துல்மால் வேண்டும்
சிறுசேமிப்புத் திட்டம் பைத்துல்மாலாகியது – த.மு.மு.க. விருதுநகர்
38 வருட சேவையில் தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமியின் வாணியம்பாடி பைத்துல்மால்
வட்டியின் கோரப்பிடியிலும் பொருளாதாரச் சுரண்டலிலும் சிக்கத் தவித்த அரபு மக்களுக்கு 1400 வருடங்களுக்கு முன்னரே விடுதலை வழங்கியது இஸ்லாம்.
‘வட்டியை என்னுடைய காலடியில் மிதிக்கிறேன்! கொடுத்த தொகைக்கு அதிகமாக எதையும் இனிமேல் பெறக் கூடாது!’ என்ற நபி (ஸல்) அவர்களின் வீர முழக்கம் அன்றைய ஏழைகளுக்கு மறுவாழ்வு தந்தது.
மேலும் படிக்க

மாவீரன் மருத நாயகம்

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.
1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.
அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.
படத்திற்குப் பெயர் மருதநாகயம்! படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது. யார் அந்த மருத நாயகம்? அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது.
காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.
கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை!
இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!
மேலும் படிக்க

Wednesday, December 8, 2010

இஸ்லாம் ஃபோபியா பீதியில் மேற்குலகம்

இஸ்லாம்போபியா என்ற சொல்லாட்சி 1980களில் முதன்முறையாக உலக அரங்கில் வழங்கப்பட்டது இது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு செய்யப்பட்ட பிரச்சாரத்தினால் இந்த உலகம் சந்தித்த சோதனைகள் ஏராளம்.
பொதுவாக போபியா என்பது பய வியாதியை குறிப்பிடும் சொல் என்பது உங்களுக்கு தெரியும் . இருளைக்கண்டால் பயம் உயரத்தைக்கண்டால் பயம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கண்டால் பயம் வகைகள் பயந்த சுபாவம் கொண்ட மனிதர்களை நாளும் அச்சத்திலும் அல்லலிலும் ஆழ்த்தியது தற்போதும் ஆழ்த்தியும் வருகிறது.
சாதாரண நாயைக்கண்டால், இல்லாத பேயைக் கண்டால் பயப்படும் வியாதியைப்போல் இஸ்லாம் போபியாவை அவ்வளவு சாதாரணமாக எடை போட முடியாது. உலக நாடுகளை குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க சக்திகளை அது படுத்தி எடுத்திருக்கிறது. இஸ்லாம்போபியா என்பது மேற்குலகில் வாழும் மக்களிடையே ஒரு மன முதிர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தியது.
இஸ்லாத்தை, முஸ்லிம்களை, திருக்குர்ஆனை முஸ்லிம் கலாச்சாரத்தை வேகவேகமாக ஏற்படுத்தி வரும் அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த சூழ்ச்சி மனம் படைத்த கொடியவர்களால் குறிபார்த்து வீசப்பட்ட தந்திரச்சொல் தான் இஸ்லாம்போபியா இஸ்லாம் என்பது குளிர்ச்சி நிறைந்த எழுச்சி நிறைந்த ஓர் நேர்வழிப்பாதை என்பதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த பிற்போக்கு சக்திகள் தாக்குதல் தொடுப்பதற்காகவே இந்த சொல்லாடலை பயன்படுத்து வதாக சமூக நல ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் படிக்க

சமுதாய ஒற்றுமை குலைவு? திருவிடைச்சேரி? நேரடி கள ஆய்வு!

சமுதாய ஒற்றுமை குலைவுக்கு சன்மார்க்கமா காரணம்?

திருவிடைச்சேரியில் நடந்தது என்ன? நேரடி கள ஆய்வு

சமுதாயம் ஒற்றுமையாக வாழ்வதற்காக அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் நேரான வழியை காட்டி இருக்கின்றனர்.
அத்தகைய நேர்வழியின் பக்கம் மக்களை அழைக்கக் கூடிய அழைப்புப் பணியை (தஃவாவை) செய்வதற்கும், ஒரு அழகிய வழி முறை உண்டு.
‘நான் கடவுள்’ என்ற கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடம் அழைப்புப் பணி செய்ய மூஸா (அலை) அவர்களை அனுப்பிய இறைவன் அவனிடம் நளினமாகவே எடுத்துச் சொல்ல சொன்னான்.
(பார்க்க: அல்குர்ஆன் 20:44)

கொடுங்கோன்மையானவனிடமே நானே கடவுள் என்றவனிடமே நளினமாக எடுத்துச் சொல்ல வேண்டுமானால் சக முஸ்லிம் ஜமாஅத் மக்களிடம், இஸ்லாத்தை சரிவர முழுமையாக விளங்காமல் அரைகுறையாக விளங்கியவர்களிடம் எடுத்துச் சொல்வதற்கு கடும் போக்கை கையாளலாமா?

இஸ்லாம் என்பது சாந்தி, சமாதானம், அமைதி, கட்டுப்பாடு இவைகளை வலியுறுத்தும் மார்க்கம். இதற்காகவே இஸ்லாத்திற்கு வெளியிலுள்ளவர்களும் கூட ஆசைப்பட்டு ஈர்க்கப்பட்டு இதில் இணைய வருகின்றனர். இணைந்தும் வருகின்றனர். ஆனால், இதனை சிதைக்கும் விதமாகவும், குலைக்கும் விதமாகவும் சில மூடர்கள் அறிவிலிகள் நடந்து கொள்வதால் இஸ்லாத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டு விடுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தின் மீதே வெறுப்பும், இஸ்லாமிய மக்கள் மீது மோசமான எண்ணமும் ஏற்பட்டு நாளடைவில் அது வளர்ந்து குரோதமாகவும், விரோதமாகவும் உருமாறி சமுதாய மக்களை கருவறுக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவிரித்தாடுகிறது.

இந்த பாரதூரமான நிலைக்கு காரணம் இஸ்லாத்தை தானே சரியாக விளங்காதவர்கள் அரை குறை ஞானத்துடன் அழைப்புப் பணி களத்தில் இறங்கியதே!
மார்க்கத்தில் நிர்ப்பந்தம் என்பதே இல்லை என்கிறான் இறைவன் (அல்குர்ஆன் 2:256)

முரட்டுத்தனமாக கடுமையாக மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நளினமாகத்தான் எடுத்துச் சொல்ல வேண்டும். இல்லையேல் மோசமான விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்.
மேலும் படிக்க

Monday, December 6, 2010

விஞ்ஞான வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு!

நவீன விஞ்ஞானம் விண்ணை முட்டும் அளவு வளர்ந்து விட்டது. அறிவியல் துறை கண்களை அகல விரித்து வியப்புடன் பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த அறிவியல் எழுச்சி, விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்தாக நின்று உழைத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்பது முஸ்லிம்கள் பலருக்கும் தெரியாத செய்தியாகும். அறிவியலுடைய, விஞ்ஞானத்துடைய வரலாறு பற்றிப் பேசும் எவரும் இஸ்லாத்துடைய, முஸ்லிம்களுடைய பங்களிப்புப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. மத்திய காலத்தில் அறிவியலின் வளர்ச்சி என்பது முஸ்லிம்களின் வரலாற்றில்தான் தங்கியிருந்தது. இருள் அகற்றிய அறிவு தீபம்: நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிக்க ஆரம்பித்த காலம் அரேபிய வரலாற்றில் ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா (அறியாமைக் காலம்) என வர்ணிக்கப்படுகின்றது. உலக வரலாற்றில் 500 – 1500 உட்பட்ட காலம் ‘மத்திய காலம்’ என்றும், ‘இருண்ட யுகம்’ என்றும் வர்ணிக்கப்படுகின்றது. இக்காலப் பகுதி இருள் சூழ்ந்த காலப் பகுதியாகக் காணப்பட்டது. இஸ்லாத்தின் எழுச்சியும், முஸ்லிம்களின் அறிவுத் தேடலும்தான் இருள் படிந்திருந்த உலகுக்கு அறிவு தீபம் ஏற்றி ஒளி கொடுத்தது. அறிவியலின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாகக் கொக்கரிக்கும் ஐரோப்பிய – அமெரிக்க நாடுகள் அன்று நாகரீகமோ, பண்பாடோ, நல்ல பழக்க – வழக்கங்களோ தெரியாமல் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிக் கிடந்தன. ஐரோப்பாவின் நிலை: இஸ்லாம் வளர்ச்சி கண்ட போது முஸ்லிம் உலகும், ஐரோப்பிய உலகும் எப்படி இருந்தன என்பது பற்றி விக்டர் ராபின்ஸன் (victor Rabinson) தனது ‘மருத்துவத்தின் கதை’ (The Story of Medicine) மேலும் படிக்க

வரலாற்றை கொன்றது புராணம்

செப். 30 அன்று மாலை 3.30 மணிக்கு 60 ஆண்டுகாலமாய் எதிர்பார்த்த தீர்ப்பு வரவிருக்கிறது என்ற பரபரப்பு நாட்டையே கட்டிப் போட்டது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்ல… அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களும் உலக நாடுகளின் அரசுகளும் எதிர்பார்த்திருந்தார்கள். இந்திய சாலைகள் அலஹாபாத்தை நோக்கி இருந்தது என்றால் அது மிகையில்லை…காரணம், உலகிலேயே ஜனநாயகத்திலும், சிறுபான்மை உரிமைகளை மதிப்பதிலும் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை விட இந்தியா சிறந்தது என்ற நம்பிக்கைதான். ஆனால், அது நம்பிக்கை அல்ல. மாயை என்று அடுத்த ஒரு மணி நேரத்தில் தெரிந்தது. இந்துத்துவ தரப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் இரட்டை விரல்களை உயர்த்திக் கொண்டே, அலஹாபாத் நீதிமன்றத்தின் வாசல்களைதாண்டி, பலத்த பாதுகாப்போடு வெளியே வந்தனர். அப்போது பலரின் உள்ளங்கள் பதறின. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றும், அந்த இடம் மூன்றாகப் பிரிக்கப்படும்என்றும் தீர்ப்பு குறித்து அவர்கள் கூறியபோது, பாபர் மஸ்ஜித் இரண்டாம் முறையாக ஷஹீதாக்கப்பட்டது போல் இருந்தது. காந்தியடிகள் மூன்றாவது முறையாக சுட்டுக் கொல்லப்பட்டது போல் அதிர்ந்தது இந்தியா! வெட்டியான்கள் இருக்க வேண்டிய இடத்தில் சில நீதிபதிகள் இருப்பார்கள் என்று யாருக்கு தெரியும்? இது தீர்ப்பல்ல, தீராத நெருப்பு என்பது புரிந்தது. மாலை 3 மணியிலிருந்து இந்தியர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தொலைக்காட்சிகள், பரபரப்பாக ‘பிரேக்கிங் நியூஸ்’ வெளியிட்டன. சுமார் இருபது கோடி முஸ்லிம்களும், இதர சிறுபான்மையினரும், மதச்சார்பற்ற, தேசிய முற்போக்கு சக்திகளும் ஒரு கணம் திகைத்தார்கள். அவர்களின் இதயங்களில் மேலும் படிக்க

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு வரலாற்றை சிதைத்துள்ளது

பாபர் மஸ்ஜித்பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கியுள்ள தீர்ப்பை ஒரு அரசியல் தீர்ப்பு என்றே கருதவேண்டும். இத்தகைய தீர்ப்பை வழங்குவதற்கு நீதிமன்றம் தேவையில்லை. அரசே இப்படிப்பட்ட ஒரு முடிவை நீண்ட நாட்களுக்கு முன்பே எடுத்திருக்க இயலும். இடிக்கப்பட்ட பள்ளிவாசல் இருந்த இடத்தை கையகப்படுத்தி அங்கு ஒரு புதிய கோயிலை கட்டுவது தான் இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. பாபரி மஸ்ஜித் பிரச்சனையில் அரசி யல் மட்டுமின்றி வரலாறு ஒரு முக்கிய அம்சமாக அமைந்தது. ஆனால் இந்த தீர்ப்பில் வரலாற்று உண்மைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் ஸ்ரீராமர் பிறந்தார் என்றும் அவரது பிறப்பை நினைவு கூறும் வகையில் அங்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ராம பக்தர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மதநம்பிக்கைக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஒரு நீதிமன்றத்தில் இத்தகைய தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஸ்ரீராமரை ஹிந்துக்கள் மிகுந்த மரியாதையுடன் வழிப்பட்டு வருகின்றார்கள் என்பது உண்மை தான். ஆனால் இதை அளவுகோளாக வைத்து ஸ்ரீராமரின் பிறந்த இடம் இதுதான், எனவே அந்த இடத்தை எங்களுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை சட்டரீதியாக ஏற்க இயலுமா? இந்த அடிப்படையில் வேண்டுமென்றே ஒரு மிக முக்கிய வரலாற்று சின்னம் அழிக்கப்படுவதற்கு உதவிட இயலுமா? பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் மேலும் படிக்க

தீர்ப்புகள் திருத்தப்படட்டும்







தீர்ப்புகள் திருத்தப்படட்டும் :- செப்டம்பர் 30: இந்திய நீதிமன்ற வரலாற்றின் கருப்பு தினம்

பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதிமன்ற வரலாற்றின் ஒரு கரும் புள்ளியாக அமைந்துள்ளது. ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் ஆவணங்கள், வருவாய் பதிவேடுகள் மற்றும் சட்டப்பூர்வமான ஆதாரங்களுக்கு பதிலாக வெறுமனே ஹிந்துக்களின்; ஒரு பிரிவினரின் நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்திற்கு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. டிசம்பர் 6, 1992 எப்படி ஒரு கருப்பு தினமோ அதே போல் விடுதலைப் பெற்ற இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் செப்டம்பர் 30ம் ஒரு கருப்பு தினமாகும்.

450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டு தலமாக இருந்த பாபரி பள்ளிவாசலை இடித்து விட்டு அங்கே கோயில் கட்ட சங்பரிவார் அமைப்பினர் தங்கள் மதநம்பிக்கையை தான் முன்வைத்தார்கள். உச்சநீதிமன்றம் பாபர் பள்ளிவாசல் கட்டடத்திற்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டு விடக் கூடாது என்று போட்டிருந்த தடை உத்தரவை காலில் போட்டு மிதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கினார்கள். இத்தனை பாதகச் செயல்களையும் அவர்கள் செய்ததற்கு தங்கள் மதநம்பிக்கைத் தான் காரணம் என்று கூறினார்கள். அவர்களது இக்கொடுஞ் செயலை நியாயப்படுத்தும் வகையில் தான் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. மேலும் படிக்க

Sunday, December 5, 2010

கண்ணாடிக் கயிறு

நம் நிலை நன்றாயில்லை காரணம் – நாம் ஒன்றாயில்லை… பிறை மதி காண்பதிலும் குறைமதி நமக்கு.. பிரிவதும், சரிவதும் தொடர்கதை எமக்கு.. ஒரே இறை… எத்தனைக் கூட்டங்கள்… ஒரே மறை… எத்தனைக் குழப்பங்கள்… ஒரே பிறை எத்தனைப் பெருநாட்கள்… மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் தெரியவில்லை நமக்கு மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது… நாம் செண்டுகளைப் பரிமாறும் பெருநாட்களில் ஏகாதிபத்தியம் குண்டுகளை வீசுகிறது… பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தானம் எரியும் ஈராக் கருகும் காஷ்மீர் பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் ரத்தம்… இருந்தும் திருந்தவில்லை இன்னும் நம் சித்தம்… வேத வார்த்தையை வாழ்க்கையாய் ஆக்கும் கடமை மறந்தோம் கொடுமை அடைந்தோம்… நம் நிலை நன்றாயில்லை காரணம் – நாம் ஒன்றாயில்லை… இறைவனின் கயிறை ஒன்றாகப் பற்றினாலே சமுதாய ஒற்றுமை உருவாகும்… நம்மில் சிலர் ஒற்றுமை என்னும் கயிறு திரித்தார்கள்… பிறகு ஒற்றுமையாய் இருப்பதில்லை என்பதில் மட்டுமே ஒற்றுமையாய் இருந்தார்கள்… ஒருவருக்கொருவர் நாம் கண்ணாடிகள் ஆனால் எப்போதும் நமக்குள் கல்வீச்சுக்கள்… ஒவ்வொரு திசையிலும் சிதறினோம் காலமெல்லாம் நாம் கதறினோம்… இதயத் துணிகளை இணைத்துத் தைக்க பெருமானார் தந்து சென்றது வேத நூல் நம் கைகளிலோ இப்போது பிரிவினைக் கத்தரிக்கோல் சிறு சிறு துளிகள் நிலத்தில் மூழ்கும் பெரு வெள்ளத்தில் இந்த நிலமே மூழ்கும் வெள்ளம் என்பது நீரின் ஒற்றுமை… இருளிலும், காற்றிலும் ஒரு சுடர் நடுங்கும் சூரிய வருகையில் காரிருள் அடங்கும் சூரியப் பேரொளி ஒளியின் ஒற்றுமை… ஓலை விசிறி மேலும் படிக்க

பாலியல் கொடுமைகள்

தேவாலயங்களிலும், கன்னியாஸ்திரி மடங்களிலும் நடக்கின்ற பாலியல் கொடுமைகளையும், கன்னியாஸ்திரிகளுக்கு கன்னி வைத்து, வேட்டையாடும் ‘கன்னிஸ்கான’ பாதிரியார்களையும் அம்பலப்படுத்தி, ‘அருட் சகோதரி ஜெஸ்மி’ எழுதிய புத்தகம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏறத்தாழ ஒப்புதல் வாக்குமூலம் போலவும், வெள்ளை அங்கி உலகத்தில் கறுப்புப் பக்கங்களைக் காட்டும் வகையிலும் கே.ஆர். ஷிபு என்ற பாதிரியார், ‘‘இங்கே ஒரு போதகரின் இதயம்’’ என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகம் சம்சார வாழ்வை வெறுத்தோர் குறித்து மின்சார அலைகளை ஏற்படுத்தி உள்ளது. செப் 2, 2010 அன்று வெளியீட்டு விழா கண்ட இப்புத்தகம், பாலியல் இன்பமும், ஆபாசப் படங்களும் வெள்ளாடை உடுத்துவோரின் வாழ்வில் ஒரு பகுதி என வில்லங்கமாய் பேசுகிறது. (பொதுவாய்க் குற்றம் சாட்டுவதில் நமக்கு உடன்பாடில்லை. சில நல்லவர்களும் இருக்கலாம்.) 60% பாதிரியார்களுக்குப் பாலியல் தோழியர் உண்டு என்றும், சக கன்னியாஸ்திரிகள், விதவைகள் மற்றும் இவர்கள் மீது நம்பிக்கை வைத்த பெண்கள் ஆகியோர் இவர்களது வேட்டைக்கு இலக்கானவர்கள் என்கிறார் ஷிபு. பாவ மன்னிப்புக் கேட்க வரும் பெண்கள் ரகசியமாகச் செய்த குற்றங்களை வெளிப்படையாக பாதிரியாரிடம் கூறியாக வேண்டும். கணவனுக்குத் துரோகமிழைத்தல், பிறருடன் பாலியல் தொடர்பு வைத்திருத்தல் ஆகிய தவறுகளைக் கூறி பாவ மன்னிப்புக் கோரும் பெண்களை பாதிரியார்கள் ‘புதிய பாவங்களைச் செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள்’ என்றும் குண்டு வீசுகிறார் ஷிபு. மக்களின் வறுமையையும், நம்பிக்கையையும் இவர்கள் சாதகமாக்கிக் கொள்வதாகவும் கூறியுள்ளார். 11 ஆண்டு காலம் பாதிரியாகப் பணியாற்றியுள்ள இவர், ஆயிரக்கணக்கானோரின் பாவ மேலும் படிக்க

காவி பயங்கரவாதம்

‘‘இஸ்லாமிய பயங்கரவாதம்’’ என்ற வார்த்தையை இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஒலித்து வந்தன. அதன் எதிரொலிதான் இப்போது வில்லங்கமாக வெளிப்பட்டிருக்கிறது.
அனைத்து மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள் (டிஜிபி) மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. காவல்துறை தலைவர்கள் இடையே உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில், ‘‘காவி பயங்கரவாதம் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’’ என்று கூறினார். ஒரு உள்துறை அமைச்சர் என்ற வகையில், அவருக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்ப டையில் காவி பயங்கரவாதம் பற்றி பேச அதிகம் உரிமையுடைவர் ப. சிதம்பரம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கைகள் பலவற்றில் நமக்கு முரண் உள்ளபோதிலும், மதவெறி சக்திகளை கண்டறிவதில் அரசு தெளிவாக இருப்பது சமீபத்திய சம்பவங்களால் உணர முடிகிறது. எனினும், குஜராத் போலி என்கவுண்டர் சதிகள் தொடர்பில் மோடி தலைமையிலான பாஜக அரசு சிக்கி சின்னா பின்னமாகி வரும் வேளையில், ‘அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதா’, ‘விலைவாசி ஏற்றம்’ போன்ற சர்ச்சைகளை நாடாளுமன்றத்தில் பாஜக கிளப்பாமல் இருக்க, வெளிப்பட்டு வரும் காவி பயங்கரங்கள், போலி என்கவுண்டர்கள் போன்ற சர்ச்சைகளை காங்கிரஸ் மௌனமாக விட்டுவிட வேண்டும் என்று இரு தரப்புக்குமிடயே அதிகாரப்பூர்வமற்ற கமுக்க உடன்பாடு ஏற்பட்டிருப் பதாக ஊடகங்கள் கசிய விட்டு வரும் செய்திகள் பொய்த்து விட வேண்டும் என்பதே நம் விருப்பம். அது உண்மையாக இருந்துவிடுமானால், சிறுபான்மையினர் வாக்குகளால் தான் ஆட்சி அமைக்க முடிந்தது என்று மேலும் படிக்க

Saturday, December 4, 2010

இந்திய வரலாற்றில் வேலூர் புரட்சி

17 -ஆண்டுகளாக ஆங்கிலேயரை குலை நடுங்க வைத்த திப்பு தன் 39-வது வயதிலேயே ஷஹீதாகி வீரமரணம் அடைந்தது ஒரு வரலாற்று சோகமாகும். காவிரியே கண்ணீர் சிந்தும் கனத்த நினைவுகளோடு திப்பு சுல்தானின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் சுதந்திர எரிமலையின் தீ சுவாலைகள் மட்டும் அடங்கவில்லை.
ஹைதர் அலி, அவர் மகன் திப்பு சுல்தானை தொடர்ந்து திப்புவின் பிள்ளைகளும் குடும்ப வழியில் தாய்நாட்டிற்காக களம் புகுந்தனர்.
டிமேலும் படிக்க

நபிமொழி தரும் பாடங்களும்… படிப்பினைகளும்…

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ‘‘அல்லாஹ் வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘‘உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ‘‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!’ என்றார். ‘‘தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘‘இல்லை!” என்றார். ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவ ளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘‘இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். மேலும் படிக்க

Friday, December 3, 2010

இரும்பு மனிதர்கள்!

‘ஆது’ கூட்டத்தினரின் அழிவுக்குப் பிறகு தோன்றியவர்கள்தான் ‘ஸமூத்’ கூட்டத்தினர். ஸமூது கூட்டத்தினரை ‘இரம்’ வம்சத்தினர் என்றும் ‘ஹிஜ்ர்’ வாசிகள் என்றும் அல்குர்ஆன் அழைக்கிறது. அதன் 15-வது அத்தியாயத்திற்கு ‘அல்ஹிஜ்ர்’ என பெயர் சூட்டப்பட்டு அவர்கள் நினைவு கூறப்படுகிறார்கள். மதீனாவிலிருந்து சுமார் 347 கி.மீ. தொலைவில் ‘தபூக்’ நகருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது தான் ‘அல்உலா’ நகரம். அங்குதான் ஹிஜ்ர் பகுதி உள்ளது. இப்போது அதை ‘மதாயின் ஸாலிஹ்’ -(ஸாலிஹ் (அலை) அவர்கள் வசித்த ஊர்) என்று அழைக்கின்றார்கள். கடும் பலம் வாய்ந்த சமுதாயமாக படைக்கப் பட்டிந்த ஸமூத் கூட்டத்தினர், சிலைகளை வணங்கிக் கொண்டும், ஆடம்பர வாழ்க்கையில் திழைத்துக் கொண்டும், மலைகளைக் குடைந்து, கோட்டைகள் கட்டி வாழ்ந்தும் வந்தார்கள். தோட்டங்களும் நீரூற்றுக்களும் வேளாண்மைகளும் பேரீத்தத் தோட்டங்களும் அங்கு மிகுந்த காணப்பட்டன. அவர்களிடம் நபியாக அனுப்பப்பட்ட ஸாலிஹ் (அலை) அவர்களின் ஓரிறைக் கொள்கையையும் தூதுத்துவப் பிரச்சாரத்தையும் ஏற்க மறுத்தனர். நீங்கள் இறைத்தூதர் என்பதற்கு ஏதேனும் அத்தாட்சியை கொண்டு வந்தால்தான் உங்களை நபியாக ஏற்போம் என்றனர். இவ்வாறு முறையிடுவது அவர்களுக்கு சோதனையாகவும் தண்டனையாகவும் அமைந்து விடும் என்பதை புரியாத அவர்கள் தம் கோரிக்கையில் பிடிவாதமாகவும் இருந்தனர். அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, கண்கூடான அத்தாட்சியாக பெண் ஒட்டகம் ஒன்றை அல்லாஹ் வெளிப்படுத்தினான். நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்பதற்கு இதோ நீங்கள் கேட்ட அத்தாட்சி! இதனை எந்த தொந்தரவும் செய்யாமல் பூமியில் மேய விட்டு விடுங்கள்! அதற்கென தண்ணீர் அருந்தும் மேலும் படிக்க

Thursday, December 2, 2010

‘அலக்’ எனும் அற்புதம்

1. நிச்சயமாக மனிதனை களி மண்ணின் மூலத்திலிருந்து நாம் படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில், அவனை விந்தாக நாம் ஆக்கினோம். 2. பின்னர், இந்த இந்திரியத்தை அலக்காக படைத்தோம் 3. பின்னர், அந்த அலக்கை தசைத் துண்டாகப் படைத்தோம். 4. பின்னர், அந்தச் தசைத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம். 5. பின்னர், அவ்வெலும்புகளுக்கு சதையை அணிவித்தோம். 6. பின்னர், அவனை வேறொரு படைப் பாக (முழு மனிதாக) உண்டாக்கினோம்….. (அல்குர்ஆன் 23:12&14) ஆண் உயிரணுவும், பெண் சினை முட்டையும் சேர்ந்து ‘ஸைகோட்’ எனும் புதிய செல் உருவாகிறது. மனித கருவின் ஆரம்பம் இந்த ஸைகோட்டில் இருந்து தான் தொடங்குகிறது. ‘கலப்பு இந்திரியத் திலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம்’ என்று அல்குர்ஆன் 76:2ல் குறிப்பிடுவது இதனைத்தான். அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டு சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு கருவியலில் ‘கலப்பு இந்திரியம்’ என்ற கட்டம் இருப்பதாக ஹெர்ட்விக் என்பவரால் 1875ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கலப்பு இந்திரியம்’ தன்னுடைய பலவித பரிமா ணங்களுடன் கருவின் குழாய் வழியாக கருவகத்தை நோக்கி திரவப் பந்தின் வடிவமைப்பைப் பெற்று நகர்கிறது. அப்போது அதன் ‘செல்கள்’ பன்மடங்காகப் பெருகுகின்றன. இருந்தாலும் கூட கற்பப் பையின் உள்வரிச் சவ்வில் தன்னைப் பதித்துக் கொள்ளும் வரை திரவப் பந்தின் வடிவத்தையே கொண்டிருக் கின்றது. இதைத் தொடர்ந்து ‘கலப்பு இந்திரியம்’ என்ற நிலை யிலிருந்து ‘அலகா’ எனும் புதிய நிலைக்கு மாறுகிறது. ‘அலக்’ மேலும் படிக்க

பெருமானார் பயன்படுத்திய கற்பித்தல் முறைகள்

கற்பித்தலின் போது ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு. 1. கேட்பவர்களை சோர்வடையச் செய்யாமல் இருத்தல், 2. சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும், எளிமையாகவும் சொல்லுதல். நபி (ஸல்) அவர்களின் அணுகுமுறையும் இவ்வாறுதான் அமைந்திருந்தது. தனது உரைகளின் போது நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை நாம் விரல்விட்டு எண்ணிக் கொள்ளும் அளவுக்கு மிகக் குறைவாகவே இருக்கும் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். & பெரும்பாலும் மிக நீண்ட சொற்பொழிவாக அவர்களின் பேச்சுக்கள் அமையாது. சுருக்கமாகவும், சுற்றி வளைக்காமலும், தெளிவான வார்த்தைகள் கொண்டதாகவும் இருக்கும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த பெரும்பாலான செய்திகளை நபித் தோழர்களால் ஒருமுறை கேட்ட உடனேயே இலகுவாக மனனம் செய்ய முடிந்தது. ஏன் நம்மால் கூட பல ஹதீஸ்களை அதன் மூல அரபி மொழியில் இலகுவாக மனனம் செய்ய முடிவதற்கும் இதுதான் காரணம். அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் தன்னுடைய மாணவர்களுக்கு, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று மட்டும் பாடம் நடத்தக் கூடியவர்களாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவரு டைய மாணவர்களோ கல்வியின் மீது கொண்ட அதிக ஆர்வத்தால் தினமும் தங்களுக்கு பாடம் கற்பிக் குமாறு வேண்டுகிறார்கள். ஆனால் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களோ, “இல்லை! நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு காட்டித் தந்த வழிமுறை இதுதான். நீங்கள் சோர்ந்துபோய் அதன் காரணமாக கற்பதில் ஆர்வம் காட்டாது போய் விடுவீர்களோ என்ற அச்சம் மட்டும் மேலும் படிக்க

வரலாறும், முக்கியத்துவமும்

முஸ்லிம் சமுதாயத்தில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்றாக ‘பைத்துல் மால்’ காணப்படு கின்றது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனமே ‘‘பைதுல் மால்’’ ஆகும். ‘பைத்துல் மால்’ என்ற சொல் பிரயோகம் முதன்முதலில் முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. ஆரம்பத்தில் மதீனாவில் உள்ள ‘ஸனஹ்’ என்ற இடத்தில் பைத்துல் மாலை நிறுவி பின்னர் அதை மதீனாவுக்குள் கொண்டு வந்தார்கள். அதன் பொறுப்பாளராக அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி) அவர்களை நியமித் தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் பைத்துல் மாலை உருவாக்குவதற்கான முன்மாதிரியை நபி (ஸல்) அவர்களது வாழ்விலிருந்தே பெற்றுக் கொண்டார்கள். பைத்துல் மால் என்கின்ற பிரயோகம் நபி (ஸல்) அவர்களால் நேரடியாகப் பய்னபடுத்தப்படாவிட்டாலும், கருத்து ரீதியாக அது அவர்களது காலத்தில் இருந்துள்ள தைக் காணலாம். ஸகாத்தை வசூலித்து விநியோகம் செய்தல், இஸ்லாமிய அரசுக்குக் கட்டுப்பட்டு வாழக்கூடிய முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து பெறப் பட்ட ‘ஜிஸ்யா’ என்ற வரியை வசூலித்து பொது நலனுக்காகப் பயன்படுத்துதல் போன்ற பணிகள் நபி (ஸல்) அவர்களால் மேற்கொள்ளப்பட்டன. சேர்க்கப்படும் பொருட்கள் நபி (ஸல்) அவர்களது வீட்டில் வைக்கப்பட்டது. சில வேளைகளில் மஸ்ஜிதுந் நபவியை ஒட்டியதாக ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு வைக்கப்படும். பின்னர்அங்கிருந்து உரியவர்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படும். நபி (ஸல்) அவர்களது காலத்தில் பைத்துல் மால் முக்கியத்துவம் பெறாமல் இருந்தமைக்கு 1. இஸ்லாமிய அரசு அதன் மேலும் படிக்க