Tuesday, November 30, 2010

மகிழ்ச்சியும் மார்க்கம்தான்!

நபி (ஸல்) அவர்களே நமக்கு அனைத்துத் துறைக்கும் முன்மாதிரி! நபித் தோழர்களுடன் துன்பத்திலும் துயரத்திலும் பங்கெடுத்ததைப் போன்று மகிழ்ச்சியிலும் இன்பத்திலும் இணைந்திருந்தார்கள். சிறுவர்களுடன் விளையாடினார்கள். மனைவியர்களுடன் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள். பிறர் சிரிக்கும் அளவுக்கும் சிந்திக்கும் அளவிற்கும் உரையாடினார்கள். உண்மையான செய்திகளைக் கூறி கேலியும் செய்தார்கள். மகிழ்ச்சியாக இருப்பதையும் சிரிப்பதையும் விளையாடுவதையும் மார்க்கப் பற்றுக்கு முரணாக கருதும் சகோதரர்களும் நம்மிடையே உள்ளனர். சோகம் வடிந்த முகமும் அனைத்தையும் இழந்த தோற்றமும்தான் இறையச்சத்தின் அடையாளம் எனக் கருதுகிறார்கள். இஸ்லாத்தின் வரையறைகளை முழுமையாக அறியாதிருப்பதே இதன் காரணம் எனக் கூறலாம். இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கமாகும். இயற்கைகளில் சிறந்தவை அனைத்தையும் அது அனுமதிக்கிறது. அதிலும் குறிப்பாக மனித வாழ்வில் இன்பம் சேர்க்கும் அனைத்தையும் வரவேற்கிறது. அல்லாஹ்வை மறக்கச் செய்யாத மகிழ்வுகள் என்றும் அல்லாஹ்வை மறக்கச் செய்வதிலும், அவனுக்கு மாறு செய்வதிலும் ஏற்படும் மகிழ்வுகள் என்றும் மார்க்கத்தில் இரண்டு வகையாக மகிழ்ச்சிகள் இருப்பதை அல்குர்ஆன் அடையாளம் காட்டுகிறது. முதல் வகை மகிழ்ச்சியை மார்க்கம் அனுமதிப்பது மட்டுமின்றி அதை வரவேற்கவும் செய்கிறது. சில நேரங்களில் நல்லறங்களின் சன்மானமாகக் கூட மகிழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று, நோன்பைத் திறக்கும் போது, மற்றொன்று அல்லாஹ்வை சந்திக்கும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நெருப்பு வணங்கிகளால் ஆட்சி செய்யப்பட்டு வந்த ரோமாபுரியை வேதவாசிகள் ஆட்சி செய்யும் பாரசீகம் பத்து ஆண்டுகளுக்குள் வெல்லும். அதைக் கண்டு முஸ்லிம்கள் மகிழ்வார்கள் மேலும் படிக்க

Monday, November 29, 2010

சுன்னாவின் ஒளியில் பெருநாள்

அரபு மொழியில் பெருநாள் என்பதற்கு ‘ஈத்’ என்று சொல்லப்படும். உண்மையில் ஈத் என்றால் திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும். பெருநாள் ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, மதீனாவாசிகள் ஜாஹிலிய்யாக் கால இரு பெருநாட்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதற்குப்பதிலாக அவற்றை விடச்சிறந்த இரண்டு பெருநாட்களை அல்லாஹ் உங்க ளுக்குத் தந்துள்ளான். அவை & ஒன்று அறுத்துப் பலியிடும் நாளாகிய (ஈதுல் அழ்ஹா), மற்றையது ஈதுல் பித்ர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸஈ இந்த வகையில் ரமலான் முழுக்க நோன்பு நோற்ற பின் ஷவ்வால் மாதம் முதல்பிறை பார்த்ததும் கொண் டாடப்படும் பெருநாள் ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளாகும். இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பலியிட முன் வந்ததை நினைவு கூறும் விதமாக துல்ஹஜ் மாதம் பிறை 10ல் கொண்டாடப்படும் பெருநாளே ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளாகும். சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி வெள்ளிக் கிழமை தினமும் ஒரு பெருநாளாகும். இவை தவிர வேறு எந்தப் பெருநாட்களும் இஸ்லாத்தில் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும். பெருநாளைக் கொண்டாடுவது எப்படி—? பெருநாட்களை அடையாளப்படுத்திய நபி (ஸல்) அவர்கள், அவற்றை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கான வழிகளையும் காட்டியுள்ளார்கள். புத்தாடை மேலும் படிக்க

அமைதியைத் தேடி…

அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவை ஒவ்வொரு தனி மனிதனின் தேட்டமாக ஒழுக்க மாண்புகளாகத் திகழ்ந்தாலும் உண் மையில் அவை மனித சமூக பொதுச் சொத்துதான். மனதால் எண்ணி மகிழ்வதற் குக் கூட இன்னொருவர் தேவைப்படுகிறார் எனும் போது அவை சமூகச் சொத்தாகவே கணக்கிடப்படுகின்றன. அவைகளை பேணிக் காப்பது ஒட்டு மொத்த மனித சமூகத்தின் பொறுப்பாகும். தனிமனிதன் தன் அமைதியை கெடுத்துக் கொண்டால் உண்மையில் அவன் தன்னு டைய அமைதியை மட்டும் கெடுக்கவில்லை, பொது அமைதியையும் சேர்த்தே கெடுக்கின் றான். இதனால் அங்கே அரசாங்கத் தலையீடு அவசியமாகிறது. புகை பிடித்தல் என்பது தனிமனித உரிமை என்றாலும் பொது இடங்களில் புகைப்பதற்கு அரசாங்கம் தடைவிதிப்பதற்கு காரணமும் இதுதான். மனித உயிர், உடமை, கண்ணியம், அறிவு, மார்க்கம் ஆகியவற்றின் பாதுகாப்பு அரண்தான் இஸ்லாம். மனிதன் இவ்வுலகில் உயிருக்குப் பய மின்றி வாழ வேண்டும்! அறிவுடனும் சிந்திக் கும் ஆற்றலுடனும் வாழ வேண்டும்! கற்பும் கண்ணியமும் பேணி வாழ வேண்டும்! அவ னுடைய செல்வங்களும் உடமைகளும் பாது காக்கப்பட்ட நிலையில் வாழ வேண்டும்! இஸ்லாத்தை பேணி நடக்கும் சுதந்திரத்துடன் வாழ வேண்டும்! ஆக மனிதன் இவ்வுலகில் அச்சமற்றவனாக, நிம்மதியாகவும் மகிழ்ச்சி யாகவும் வாழவேண்டும் என்பதுதான் இஸ் லாமியச் சட்டங்களின் அடிப்படை நோக்க மாகும். ஒரு உயிரைக் காப்பாற்றுபவன் ஒட்டு மொத்த மனித இனத்தையே காப்பாற்றிய வனாவான், அநியாயமாக ஒரு உயிரைக் கொலை செய்பவன் ஒட்டு மொத்த மனித இனத்தையே மேலும் படிக்க

Friday, November 26, 2010

கண்ணீர் தேசம்… காஷ்மீரின் வரலாறு

வெண்பனியால் சிரிக்கும் மலை முகடுக ளும், பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகளும், சிலிர்க்க வைக்கும் குளிரும், மனதைப் பறிக்கும் ஆப்பிள் தோட்டங்களும், கவலைப்படாமல் ஓடிக் கொண்டிருக்கும் இமய மலையின் நதிகளும் அழகிய காஷ்மீரின் அடையாளங்கள். இறைவனால் அன்பளிப்பு செய்யப்பட்ட மண் ணில், எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு காஷ்மீரியின் உள்ளத்திலும் இருக்கிறது. அழகான காஷ்மீரில் அமைதியில்லை. மகிழ்ச்சியில்லை. இப்படி நிறைய ‘இல்லை’கள்! எங்களுக்குத் தேவை ஒன்றுபட்ட ஒரே காஷ்மீர்! எங்களை நாங்களே ஆளும் உரிமை! இதுதான் பெரும்பாலான காஷ்மீரிகளின் மனநிலை என்பது கருத்துக் கணிப்புகள் கூறும் உண்மைகளாகும். காஷ்மீரின் உண்மையான வரலாறு என்ன? அது தமிழ்நாடு உ.பி., மஹாராஷ்டிரா, வங்காளம் போன்று இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதியா? அல்லது இந்தியா வுடன் இணைக்கப்பட்ட பகுதியா? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கான விடைகள் பகிரங்கமாக உண்மை யின் வெளிச்சத்தில் நடுநிலையோடு விவாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் மனித உரிமை ஆர்வலர் களின் விருப்பமாகும். முந்தைய வரலாறு என்ன? காஷ்மீரின் தேசியவாதிகள் இது பற்றிக் கூறும் போது, எங்கள் மீதான ஆக்கிரமிப்பு முகலாயப் பேரர சர் அக்பரின் ஆட்சியிலிருந்து தொடங்குகிறது எனக் கூறுகிறார்கள். காஷ்மீரின் அழகில் மயங்கிப்போன அக்பர் 1586&ல் தனது முகலாய பேரரசின் கட்டுப்பாட்டில் காஷ்மீரை இணைத்தார். அதிலிருந்துதான் எங்களின் மேலான ஆக்கிரமிப்பு தொடங்குகிறது என்பது அவர்களின் கருத்து! முகலாய பேரரசு வீழ்ச்சியடைந்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் கி.பி. 1757&ல் காஷ்மீர் ஆப்கானிஸ்தா னின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க

கல்லெறியும் இளைஞர்களும்… இராணுவ அணிவகுப்பு நடத்தும் இந்திய அரசும்

சரியாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் காஷ்மீர் சென்றபோது ஓரளவு அங்கே அமைதி உருவாகியிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷரீயத் அமைப்பு உள்ளிட்ட காஷ்மீர் இயக்கங்களிடையே ஒற்றுமை ஏற்பட்டிருந்தது. ஆஸாதி என்கிற கோரிக் கையை அவர்கள் விட்டுவிடவில்லையாயினும் ஆயுதப் போராட்டம் அங்கு ஓய்ந்திருந்தது. அமைதி வழிப் போராட்டம் முதலான சொல்லாடல்கள் யாசின் மாலிக் போன்றோரின் உதடுகளிலிருந்தும் உதிர்ந்தன. எனினும் இந்நிலையைத் தக்க வைக்கும் பொறுப்பு இந்திய அரசிடம் உள்ளது. இந்திய அரசோ அந்தப் பொறுப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை. பிரிவினை கோருபவர்களுடன் தொடர்ந்த பேச்சு வார்த்தைகைள மேற்கொள்ளுதல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள ஏழு லட்சம் இந்தியப் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளுதல், ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல், மனித உரிமை மீறல்களை நிறுத்திக் கொள்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், முறையான தேர்தல் மூலமான நல்லாட்சி வழங்குதல் முதலியவற்றின் ஊடாகவே அங்கு அமைதி தொடர முடியும் என்கிற எச்சரிக்கையோடு தான் காஷ்மீர்ப் பயணம்குறித்த எனது நு£லும் முடிந்தது. ஆனால் இந்த இரண்டாண்டுகளில் என்ன நடந்தது- மேலே குறிப்பிட்ட எந்த அம்சத்திலும் இந்திய அரசு நீதியாய் நடந்து கொள்ளவில்லை. காஷ்மீர் இயக்கங்களின் கூட்டமைப்பின் அழைப்பை மீறி அங்கே மக்கள் வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக வாக்களித்ததை இந்திய அரசு தவறாகப் புரிந்து கொண்டது. அன்றாடப் பிரச்சினைகளை எதிர் கொள்ள ஒரு நிர்வாகம் தேவை என்கிற அளவில் மட்டுமே மக்கள் தேர்தலில் பங்கேற்றனர். அதுவும் கூட மேலும் படிக்க

Tuesday, November 23, 2010

போர்க்கள புயல்… திப்பு சுல்தான் – 2

சமூக நல்லிணக்கத் தலைவன் தமிழக விடுதலை வீரர்களான தீரன் சின்னமலை, சின்ன மருது ஆகியோர் திப்புவிடம் ராணுவ உதவியை பெற்றவர் கள். ஆற்காடு நவாப், ஹைதராபாத் நிஜாம் போன்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், அவர்கள் ஆங்கிலேயர்களின் அரவணைப்பில் இருந்த தால் அவர்களை எதிரிகளாகவும், துரோகிகளாகவுமே கருதினார் திப்பு. திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதி கேரளாவின் மல பார், ஆந்திராவின் ஒரு பகுதி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலு£ர் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டது. இதில் 10 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். பிற இந்து, கிறிஸ்தவ சமுதாயங்களின் நன்மதிப் பைப் பெற்ற திப்பு சுல்தானை மிகச் சிறந்த சமூக நல்லிணக்கவாதி என வரலாற்று அறிஞர்கள் புகழ்கிறார்கள். “மதங்களிடையே நல்லுறவு என்பது குர்ஆனின் கூற்று. லகும் &தீனுகும் வலியதீன் என்பதாகும்” என தனது 1787ஆம் ஆண்டின் பிரகடனத்தில் திப்பு வெளியிட்டார். இந்துக்களின் நண்பன் கி.பி 14ஆம் நு£ற்றாண்டில் மராட்டிய இந்துப்படை சிருங்கேரி நகரைத் தாக்கி 17 லட்சம் வராகன் மதிப் புள்ள சொத்துக்களை கொள்ளையடித்தது. அதில் தங்கத்தால் செய்யப்பட்ட சாரதா தேவி சிலையும் ஒன்று. இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்த சங்கராச் சாரியாருக்கு உதவ திப்பு முன் வந்தார். பெருமளவில் நிதியுதவி செய்து மீண்டும் சிருங்கேரி மடத்தை செயல்பட வைத்தார். திப்புவின் மலபார் படையெடுப்பில் குருவாயூர் பிடிபட்டது. அங்குள்ள கிருஷ்ணன் கோவில் அர்ச்சகர்கள் ஓடி ஒளிந்தனர். கிருஷ்ணன்சிலையை வேறு ஊருக்கு மாற்றினர். மேலும் படிக்க

Sunday, November 21, 2010

இறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு!

இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் மனமும் சுவையும் உண்டு. அதற்குரிய சுவை மாறி, வேறொரு சுவை வந்துவிட்டால் அப்பொருளின் தன்மை மாறிவிட்டது, அது கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தமாகிவிடும். அவ்வாறே இறை நம்பிக்கைக்கும் (ஈமானுக்கும்) ஒரு சுவையுண்டு. ஒரு மனமுண்டு. அவை கெட்டுப் போய்விட்டால் அது கெட்டுப் போய்விடும். சுவை, ருசி மாறுபடுவதை வைத்து பொருள் கெட்டுப் போய்விட்டதை உணர்கிறோம். கெட்டுப் போன, புளித்துப்போன பொருளை நாக்கில் வைத்தவுடன், முகம் சுளித்து, உடலில் நடுக்கம் உண்டாகிறது. அவ்வாறே ஒருவரது இறை நம்பிக்கை (ஈமான்) கெட்டுப் போய்விட்டால் அவரது சொல், செயல்களில் மாற்றம் உண்டாகிவிடும். முதலில் அவரது உள்ளத்தில், மாற்றம் ஏற்பட்டுவிடும். அவரது நோக்கமும் மாறிவிடும். எவர் எல்லா அம்சங்களிலும், இறைபொருத்தத்தை நோக்கமாக கொண்டாரோ அவரது இறைநம்பிக்கை கெட்டுப் போகவில்லை. அவர் அதன் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகிவிடும். இதைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மதை தூதராகவும் ஏற்றுக் கொண்டவர் இறைநம்பிக்கையின் சுவையை ருசித்தவராவார். (முஸ்லிம்) ஒருவர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. மாறாக அவனை இரட்சகனாகவும் (ரப்பாகவும்) ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ரப்பு என்றால் ஒரு பொருளை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து, பராமரிப்பதற்குச் சொல் லப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளை பராமரித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ப்பதால் அவர்களுக்கும் ரப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. “”என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்புடன்) என்னை அவர்கள் மேலும் படிக்க

Saturday, November 20, 2010

பர்தாவே பாதுகாப்பு

சமயக்கடமை என்னுமளவில் இதை விவாதப் பிரச்சனையாக ஆக்குவதை விட பெண்களுக்குத் தேவையான அடக்கம், பண்பு என்னும் வகையில் ஹிஜாப் அணிவதற்கே நான் முக்கியத்துவம் அளிக்கிறேன் தன்னுடைய குடியிருப்பிற்கு அருகில் உள்ள வல்மார்ட் ஷோரூமிற்கு கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று ரேஹான் சிஹாம் பொருட்களை வாங்குவதற்காக சென்றார். முஸ்லிம்களின் மரபாடையான “ஹிஜாப்’பை அவர் அணிந்திருந்தார். அங்கிருந்த ஒரு கிறிஸ்துவர் அவரை நேரிடையாகப் பார்த்து, “The 12 Days of Christmas” என்னும் பாடலை பாடத் தொடங்கினார். உஸாமா பின் லாடனையும் பயங்கரவாதத் தையும் கிண்டலடிக்கும் வண்ணம் பாடினார். சிஹாமுக்கு என்னவோ போலிருந்தது. “என்னைப் பார்த்தால் பயங்கரவாதியாக உனக்கு தெரிகின்றதா?’ எனக் கேட்டார். “பயங்கரவாதிகள் வேறு எப்படி இருப்பார்களாம்?’ என்றான் அவன். இப்படிப்பட்ட தருணங்களை அமெரிக்க முஸ்லிம்கள் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடுகின்றது. Pew Research Center என்னும் நிறுவன கணக்கின்படி 53 சதவிகித முஸ்லிம்கள் செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு, “முஸ்லிமாக’ அமெ ரிக்காவில் வசிப்பது கடினமாகி வருவதாக உணருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து கொண்டு பொதுவிடங் களுக்கு செல்வது மிகவும் இடரளிக்கும் செயலாகவே உள்ளது. தம்முடைய தலைமுடியை மறைக்கின்ற வகையில் எளிமை யான ஒரு முக்காட்டையே (ஸ்கார்ஃப்) பெரும்பாலான பெண் கள் அணிகிறார்கள். பர்தா என சொல்லத்தக்க ஆடையை அணி வது ஒரு குற்றச்செயலாக கருதப்படுகின்றது. பல அரசாங்கங்கள் அந்த நிகழ்விற்குப் பிறகு, பொதுத் தளங்களில் பர்தா அணிந்து வருவதை தடை செய்து விட்டன. மேலும் படிக்க

ஹிஜாப்

மேலும் (நபியே) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடிய (முன்கை&முகத்)தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
(அல்குர்ஆன் 24:31)
மேலும் படிக்க

மேற்குலகை அச்சுறுத்தும் ஆயுதம்! ஹிஜாப்

சீறி வரும் ஏவுகணைகளையும், பாய்ந்து தாக்கும் ராக்கெட்டுகளையும், மழையென குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களையும், பேட்டன் டாங்குகள் என அழைக்கப்படும் கவச வாகனங் களையும், கண்ணுக்குத் தென்படாத லேசர் ஆயுதங்க ளையும் கண்டு கூட இன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு அச்சமில்லை. அதனை எதிர்கொள்ளும் வியூகம் பல வகுத்தாகி விட்டது. எறிகணைகளை எதிரி நாடுகள் ஏவி விட்டால் அதனை வானிலேயயே வழி மறித்து அழிக்கும் வல் லமையும், சூட்சுமமும் தெரிந்த ஆதிக்க சக்திகளுக்கு நடுக்கத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் படுபயங்கர ஆயுதம் என்ன தெரியுமா-? எம் தாய்மார்கள் அணியும் ஹிஜாப் என்னும் கவச உடைதான். மார்க்க மகளிரின் ஹிஜாப் உடைகள் அவர்களை அச்சுறுத்தும் ஆயுதமாக மாறியிருக்கிறது. ஹிஜாப் பெண்களையும், அவர் தம் உரிமைகளையும் நசுக்கு கிறது, சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு (அடங்கேப்பா) தடையாக இருக்கிறது எனக் கூறி ஹிஜாப் என்னும் கவச உடையை எதிர்க்கிறார்கள். பொழுது விடிந்தால் போதும் இரவு வரை ஹிஜாபுக்கு எதிரான கொள்கை (!) முழக்கத்தினை முழங்கி தீர்ப்பதையே மேலும் படிக்க

இஜ்திஹாத் – ஓர் ஆய்வு

வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் அனைத்துக் காலங்களிலும் மனித இனம் முழுமைக் கும் நன்நெறி வகுத்தளித்த அற்புத மார்க்கம் இஸ் லாம். அதில் சட்டத் திருத்தங்கள் இல்லை. அதற்கான தேவையுமில்லை. அதற்கான அனுமதி உலகில் எந்த மனிதருக்கும் எக்காலத்திலும் வழங்கப்படவுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக அல்லாஹ் வகுத்தளித்த நெறிதான் இன்றுவரை இஸ்லாமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. யுக முடிவு நாள்வரை அந்நெறியே இஸ்லாத்தின் நன்னெறி யாகத் திகழும். நாள்தோறும் உலகில் பிறக்கும் எண்ணிலடங்கா மாற்றங்களை இஸ்லாம் எவ்வாறு எதிர்கொள்கி றது?! என்ற கேள்வி, இமைகளை மூட தடையாய் அமைந்துள்ளது உண்மைதான்! 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. ‘இதற்கு இஸ்லாத்தில் தீர்வு இல்லை’ என்ற பட்டியல் காலியாகவே தொங்கிக் கொண்டி ருக்கிறது. இதில் மிகவும் ஆச்சரியமான மற்றொரு தகவல் என்னவென்றால் முன்னேற்றத்தின் அடுத்த டுத்த கட்டத்திற்கு மனிதனை இஸ்லாம் விரைவாக அழைத்துச் செல்வதுதான்! பிறந்த வேகத்திலேயே இறந்த போன இஸங்க ளுக்கு மத்தியிலும் ஆன்மீகத்தை மட்டுமே போதித்துக் கொண்டிருக்கும் மதங்களுக்கு மத்தியிலும் இஸ்லாம் தனது தனித்துவத்தை 14 நூற்றாண்டுகளாக நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றது. ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் தரும் முக்கியத்துவமே இதன் பிரதான காரணம் எனலாம். அறிவியல் முன்னேற்றங்களை மனித இன பாது காப்பு விதிகளால் வார்த்தெடுக்கும் இஸ்லாம், மனித சிந்தனையில் தோன்றும் கசடுகளை களையெடுத்து, தூய்மையாக்கி, தெள்ளிய நீரோடையாய் ஆரோக்கிய மான மேலும் படிக்க

Thursday, November 18, 2010

கர்ப்பிணிகள் நோன்பு வைக்கலாமா-?

ரமளான் மாதங்களில் பொதுவாக பெண்களுக்கு என்ன சந்தேகம் ஏற்படுகிறதென்றால், கர்ப்பிணிப் பெண்கள் நோன்பு நோற்கலாமா?- நோன்பு வைக்கும் பொழுது எந்த விதமான பாதுகாப்புகளை செய்து கொள்ள வேண்டும்? என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.
பொதுவாக பெண்களின் கர்ப்ப காலங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்-. முதல் மூன்று மாதங்கள், நடு மூன்று மாதங்கள், கடைசி மூன்று மாதங்கள்.
இதில் முதல் மூன்று மாதங்கள் கஷ்டமான நாட்களாகும். வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் சில தற்காப்புகளை கடைபிடிக்க வேண்டும்.
பகல் நேரங்களில் அதிகமாக ஓய்வெடுக்க வேண்டும். து£க்கத்தின் மூலமாகவோ, அமைதியாக இருப்பதன்
மூலமாகவோ ஓய்வினை மேற்கொள்ள வேண்டும். வேலைகளுக்குச் செல்பவர்களாக இருந்தால், ஒரு பக்கம் வேலைக்கு சென்று கொண்டு, ஒரு பக்கம் வாந்தியும் எடுத்துக் கொண்டு, ஒருபக்கம் நோன்பு வைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான காரியமாகும். அதனால் இது போன்ற சமயங்களில் அவர்கள் அதிகளவு ஓய்வெடுக்க முயற்சிக்க வேண்டும். நோன்பு துறந்தவுடன் எண்ணெய் பலகாரங்களை சாப்பிடக் கூடாது. அதற்கு பதிலாக பால், தண்ணீர், ஜூஸ் போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க

வேர்கள் காய்ந்தாலும் இலைகள் உதிர வேண்டாம்

பிறை முடிவு ஆட்சியாளரைச் சார்ந்தது நோன்பு மற்றும் பெருநாட்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் தொடர்புடைய காரியமாக இருப்பதினால் அவைகளை தீர்மானிப்பது இஸ்லாமிய ஆட்சியாளரின் பொறுப்பாகும். இதனை தனிமனிதர்கள் தங்கள் கைகளில் எடுப்பது கூடாது. அவ்வாறு எடுத்தால் அது சமூகப் பிளவிற்கும் பிரச்சனைக்கும் காரணமாகிவிடும். தமிழக முஸ்லிம் இது விஷயத்தில் முஸ்லிம் சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு தலைமை காஜியை சார்ந்திருக்க வேண்டும். பிறையை தீர்மானிப்பதில் அவர் தவறிழைத்தால் அதற்கான தண்டனையை அவர் அனுபவிப்பார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீதிபதிகள் மூன்று பிரிவினர்களாவர். அதில் இருவர் நரகம் செல்வார்கள். ஒருவர் சொர்க்கம் செல்வார். முறை யான கல்வியின்றியோ அல்லது கல்வியிருந்தும் வேண்டு மென்றே அதற்கு மாற்றமாகவோ தீர்ப்பளித்த இருவரும் நரகம் செல்வார்கள். கல்வியுடன் முறையாக தீர்ப்பளித்தவர்தான் சொர்க்கம் செல்வார். தலைமை நிர்வாகியாக ஒரு அபீசீனிய அடிமை இருந்தாலும் அவருக்கும் கட்டுப்பட வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறது. இமாம் உளு இல்லாமல் தொழுகை நடத்தினால் அவர் பின்னால் தொழுபவரின் தொழுகைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அது இமாமின் குற்றமாகத்தான் அமையும். எனவே அவர் தவறான முடிவெடுத்தாலும் அது சமுதாயப் பொதுமக்களை ஒருபோதும் பாதிக்காது. தலைமையில்லா சமுதாயம் தலை இல்லா உடல் போன்றது! சமுதாயம் ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். தலைமை இல்லாத சமுதாயம் சிதறிப் போய்விடும். மரணித்துவிட்டால் தாமதிக்காமல் விரைவாக நல்லடக்கம் செய்துவிடுமாறு போதனை செய்த நபி (ஸல்) அவர்களின் புனிதமான உடல், மூன்று மேலும் படிக்க

Sunday, November 14, 2010

பிறை ஒரு பிரச்சனையா?

பிறை ஒரு பிரச்சனையா? - பல அறிஞர்களின் கருத்துக்கள்




"பிறையை பார்த்தே முடிவெடுக்க வேண்டும் ஏ.இ. அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் (தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபைத் தலைவர்)"


பிறையைப் பார்த்து நோன்பு நோற்று பிறையைப் பார்த்து நோன்பை விடுவதே தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் நிலைபாடு! இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை! ஜமாஅத்துல் உலமா சபைக்கும் அரசு தலைமை காஜிக்கும் நெருங்கிய உறவு உள்ளது. இரு தரப்பும் இணைந்தே பிறை தொடர்பாக முடிவெடுக்கின்றோம்.



ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவராக செயல்பட்டுவருபவருக்கு பிறைபற்றி தகவலை தெரிவிக்கும் பொறுப்பு ஜமாஅத்தால் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் அனுப்பும் தகவலை பரிசீலித்த பிறகு, அதனை தலைமை காஜிக்கு தெரிவிக்கின்றோம். அவர்கள் அதனை மக்களுக்கு அறிவிக்கின்றார்கள்.

பிறை விஷயத்தில் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டியுள்ளது. பல பகுதிகளிலிருந்தும் தொலை பேசிகளில் வரும் தகவல்களை அங்குள்ள பொறுப்பாளர்களைக் கொண்டு உறுதி செய்ய வேண்டி யுள்ளது. சில சமயங்களில் பிறை அறிவிப்பு கால தாமதமாவதற்கு இதுவே காரணம்.



இந்த வருடம் ஷஅபான் பிறை பார்க்கப்பட்டு ஜூலை 27ம் தேதி ஷஅபான் பிறை 15 என்று ஜமாஅத்துல் உலமா சபை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இம்மாத இறுதியில் இரவு 9 மணிக்குள் ரமளான் பிறை பற்றி அறிவிப்புச் செய்யும் முயற்சியில் உள்ளோம்.
மேலும் படிக்க

Saturday, November 13, 2010

பெருநாள் மகிழ்ச்சியைத் தேடி…

மார்க்க விஷயத்தில் கருத்து வேறுபாடான சட்டங்களை அணுகும் முறை தவறி, ஒரு வகையினர் மற்ற வகையினரை விமர்சிக்கும் போக்கு சமூகத்தில் ஆரோக்கியமில்லா சூழலுக்கு வழிவகுக்கிறது. நாட்களையும், மாதங்களையும் தீர்மானிப்பதற்கு சூரியக் கணக்கு-சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தை சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொறுத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். 29 ஆம் அன்று பிறை பார்க்கப்படும். அடுத்த மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டால் புதிய மாதம் தோன்றி விட்டது எனத் தீர்மானிக் கப்படும். அப்படி இல்லையென்றால் இருக்கும் மாதம் 30 என முடிவதாக தீர்மானிக்கப்படும். சிலவேளை தலைப் பிறை தோன்றி மேக மூட்டம், மழை காரணமாக பிறை தென்படாவிட்டால் கூட மாதத்தை 30&ஆக பூர்த்தி செய்தல் வேண்டும். இந்த அணுகுமுறையைக் கையாளும் போது சில இடங்களில் தெரியாத பிறை, மற்றும் சில இடங்களில் தென்பட வாய்ப்புள்ளது. எனவே, நாட்களைத் தீர்மானிப்பதில் சில முரண்பாடுகள் தோன்றுவது இயல்பாகி விட்டது. ஆரம்ப காலத்தில் இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. எனினும், தொலைத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் பிறை என்பது பெரும் குழப்பம் ஏற்படும் அம்சமாக மாறிவிட்டது. பிறைபார்த்து நோன்பு வையுங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! என்ற நபி மொழியை ஆதாரமாகக் கொண்டு தத்தமது பகுதி யில் பிறை மேலும் படிக்க

Friday, November 12, 2010

வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்

‘‘ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டி யாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பது மான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அம் மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்குர்ஆன் 2:185)
ரமளான் மாதத்தில் சுவன வாயில்கள் திறக்கப் பட்டு, நரக வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. வணக்கங் களுக்கு ஏனைய காலத்தில் வழங்கப்படும் நன்மை களை விட பன்மடங்கு அதிகமாக வழங்கப்படு கின்றன. பாவமன்னிப்பும் நரக விடுதலையும் அளிக் கப்படுகின்றன. நல்வழி நோக்கிப் பயணிப்பதற்கு பல வாயில்கள் திறந்துவிடப்படுகின்றன. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை இம்மாதம் பெற்றிருப்பதற் குக் காரணம் இம்மாதத்தில் அல்குர்ஆன் அருளப்பட்ட துதான்.
‘நிச்சயமாக நாம் அதனை(அல்குர்ஆனை) பாக்கிய முள்ள இரவில் இறக்கினோம்”. 1000 மாதங்களை விடச் சிறந்த கத்ர் எனும் மகத்தான இரவில் இறக்கி னோம்’ (அல்குர்ஆன் 44:3, 97:3) என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் படிக்க

Monday, November 8, 2010

Tanzil : Quran Navigator

Tanzil : Quran Navigator
http://tanzil.info/
Browse, Search, and Listen to the Holy Quran. With accurate quran text and quran translations in various languages.

Tanzil : Quran Navigator

Sunday, November 7, 2010

இது நினைவூட்டும் நேரம்!

சுவர்க்க வாயில்கள் திறக்கப்பட்டு. நரக வாயில்கள் அடைக்கப்படும் புனித ரமளான் மாதம் நம்மை வந்தடைந்துவிட்டது. அளவில்லா நற்கூலியை அள்ளித் தரும் நல்லறங்களை கடைபிடிக்கவும், பாவமன்னிப்பைப் பெறவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் செயல்பட தயாராகி விட்டீர்களா? அப்படியானால் முதலில் ரமளான் மாத வணக்கங்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்! பிறகு அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று திட்டமிடுங்கள்! கடந்த வருட ரமளானை எவ்வாறு கழித்தீர்கள் என்ற மீள்பார்வையும் மிக அவசியம்! இன்று ஒரு நோன்பு முடிந்து விட்டது, இரண்டு நோன்புகள் முடிந்து விட்டன என்று பொதுக்கணக்குப் போடாமல், இன்றைய தினத்திற்கான இபாதத்களை முறையாக நிறைவேற்றியுள்ளேனா? என்று தினமும் சுயக் கணக்குப் பார்க்க வேண்டும். முஃமினின் ஒவ்வொரு நாளும் நன்மைகளை அதிகரிக்கவும் தீமைகளை விட்டுத் தவ்பாச் செய்யவும் பயன்பட வேண்டும் என்ற நபிமொழியை மறந்துவிடக் கூடாது. மறுமையில் அல்லாஹ்வினால் விசாரிக்கப்படுவதற்கு முன் தினமும் நீங்களே உங்களை விசாரித்துக் கொள்ள வேண்டும்! இன்றைய தினம் நோன்பு வைத்தீர்களா? இரவுத் தொழுகையை நிறைவேற்றினீர்களா? அந்தத் தொழுகை அமைதியாகவும் நீண்டதாகவும் அமைந்திருந்ததா? இன்றைய தினம் குறைந்தது ஒரு ஜுஸ்வு அளவாவது அல்குர்ஆனை ஓதி விட்டீர்களா? இந்த ரமளானில் அல்குர்ஆனை குறைந்தது ஒரு தடவையாவது முழுமையாக ஓதி முடித்திட முடிவு செய்துவிட்டீர்களா? சஹர் நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுதீர்களா? அந்நேரத்தில் பாவமன்னிப்புத் தேடினீர்களா? நோன்பு துறக்கும் நேரத்தில் துஆச் செய்தீர்களா? தங்களால் முடிந்த பொருட்களைக் கொண்டு பிறர் நோன்பு துறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா? இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் மேலும் படிக்க

உலமாக்கள் ஒன்றிணைந்தால் சமுதாயம் சங்கமிக்கும்!

பெருநாட்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் தொடர்பான காரியமாக இருப்பதால் அது பற்றி இஸ்லாமிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இஸ்லாமிய அரசு இல்லாத நாடுகளில் இத்தகைய பணிக்காக அரசாங்கத் தால் நியமிக்கப்பட்டுள்ள இஸ்லாமியத் துறைகளின் அறிவிப்புகளை ஏற்று அந்நாட்டு மக்கள் செயல்பட வேண்டும். அவ்வாறு அரசாங்கத்தால் எந்தத் துறையும் ஏற்படுத்தப்படாவிட்டால் அந்நாட்டு முஸ்லிம்கள் ஒன்றுகூடி இத்தகைய பணிக்காக ஒரு இஸ்லாமியத் துறையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு கட்டுப்பட்டு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இவ்வாறுதான் சவூதி அரேபிய அரசாங்க மார்க்கத் தீர்ப்பு கமிட்டியும் ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்கியுள்ளது. பெருநாட்கள்தான் முஸ்லிம்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் அடையாளச் சின்னம்! ஊர் மக்கள் அனைவரும் தக்பீர் கூறியவர்களாக பெருநாள் திடலுக்குப் புறப்பட்டு, இபாதத்களை நிறைவேற்ற வேண்டும். தொழுகை கடமையிலிருந்து விதிவிலக்குப் பெற்ற மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் பெருநாள் திடலுக்கு வர வேண்டும். திடலுக்குப் புறப்பட ஹிஜாப் ஆடை இல்லாத பெண்களுக்கு பிற பெண்கள் தங்களின் மேலதிக ஆடைகளை வழங்கியாவது அவர்களை திடலுக்கு அழைத்து வர வேண்டும். அங்கு மகிழ்ச்சியையும் பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் தங்களிடையே பரிமாறிக் கொள்ளவேண்டும். பெருநாள் தினத்தன்று முஸ்லிம் ஏழைகள் உணவின்றி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பெருநாள் தொழுகைக்கு முன்னர் ஏழைகளின் உணவான ஃபித்ரா (பெருநாள் தர்மம்) வழங்க வேண்டும். பெருநாள் தினத்தன்று வீர விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்து, ஆண்களும் பெண்களும் கண்டு களித்திடலாம். நல்ல கருத்துள்ள பாடல்களை சிறார்கள் மேலும் படிக்க்

Saturday, November 6, 2010

வாழ்க்கை ஓர் அமானிதம்

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் -& மனிதர்களில் எல்லா சாராருக்கும் மூன்று வகையான வாழ்க்கையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். கடவுளை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும், ஏற்றுக் கொண்டவர்களில் கூட ஒரே கடவுள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் பல கடவுளர்கள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் அனைத்து வகை மனிதர்களுக்குமே மூன்று வகையான வாழ்க்கையை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. அதிலொன்று & நாம் இன்று வாழ்ந்து கொண் டிருக்கக் கூடிய ‘துன்யா’ எனும் இவ்வுலக வாழ்க்கை. இது அற்ப வாழ்க்கை. மனைவிக்காகவும்,மக்களுக்காகவும் சேமித்து வைத்திருக்கக் கூடிய நாம் மறுமை நாளில் நமக்காக என்ன சேமித்து வைத்தோம் என்று சிந்திக்க வேண்டும். காலம் காலமாக உட்கார்ந்து தின்னும் அளவிற்கு சொத்து சேர்த்து வைப்பது புத்திசாலித் தனமா–? தனக்காக & மறுமைக்காக நன்மைகளை சேர்த்து வைப்பது புத்திசாலித்தனமா? இரண்டாவது & மனிதன் மரணித்த பின் சந்திக் கக்கூடிய ‘கப்ர்’ எனும் மண்ணறை வாழ்க்கை மூன்றாவது & மனிதன் சந்திக்கவிருக்கும் நிலையான, நித்திய வாழ்க்கையாக இருக்கக்கூடிய & வெற்றியையும் தோல்வியையும் பெறப்போகும் மறுமை வாழ்க்கை. இம்மூன்று வகை வாழ்க்கையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாம் வாழ்ந்து வரக்கூடிய இவ்வுலக வாழ்க் கையை எல்லா மனிதர்களுக்கும் ஓர் அமானிதமாக தந்திருக்கின்றான்-. அல்லாஹ் அமானிதமாக தந்திருக்கின்ற இவ்வுலக வாழ்வைப் பற்றி திருமறைக்குர்ஆனில்… இவ்வுலக வாழ்க்கை மனிதனை ஏமாற்றக்கூடிய ஓர் சிற்றின்பமே அன்றி வேறில்லை என்கிறான். இவ்வுலக சிற்றின்பத்தை கண்டு மேலும் படிக்க

போர்க்கள புயல்… திப்பு சுல்தான்

“பல நாள் பதுங்கி வாழும் நாயைவிட, சில நிமிடங்கள் போர் புரிந்து உயிர் துறக்கும் சிங்கம் மேலானது” என்ற பூகம்பமொழியை வரலாற்றுக்கு வழங்கிய போராளிதான் மாவீரன் திப்பு சுல்தான்.
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒருவிடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.
சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு & ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவி தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன். மேலும் படிக்க

சொந்த ஊருக்கு! Agnosticim அறியவொணாக் கொள்கை

“Agnosticim (நாத்திகம்)” கேள்விப்பட்டிருக்கிறோம், அது என்ன “Agnosticim“? உங்களில் ஒரு சிலருக்கு இந்த கேள்வி எழுந்திருக்கலாம். அதனால், முதலில் “Agnosticim” என்றால் என்னவென்று பார்த்துவிட்டு பிறகு செய்திக்குச் செல்வோம் இன்ஷாஅல்லாஹ். நாத்திகத்தை பின்பற்றுபவர் நாத்திகர் என்றால், “Agnosticim”தை பின் பற்றுபவர் Agnostic (அக்னாஸ்டிக்).
மேலும் படிக்க

அவதூறுகளின் பின்னணியில்… விமர்சனங்கள் – விளக்கங்கள்

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து வரலாறு நெடுக அபாண்டங்களும் அவதூறுகளும் பரப்பப்பட்டுள்ளன. அவர்கள் மீது தகாத குற்றச்சாட்டுகளை பரப்புவது இன்றும் தொடர்கின்றது. எங்கோ இருக்கின்ற டென்மார்க் நாடு முதல் நம் வீதியின் கடைகளுக்கு முன்னால் தொங்குகின்ற தினமலர், முத்தாரம் பத்திரிக்கைகள் வரை கேலிச் சித்திரங்களையும் தவறான தகவல்களையும் வாரி வழங்குகின்றன. பத்திரிக்கை வியாபாரம் மட்டுமே இதற்கு காரணமல்ல! இதற்கான காரணங்கள் அதையும் தாண்டி விரிகின்றன.
மேலும் படிக்க

இஸ்ராவும் மிஃராஜும்

‘மிஃராஜ்’ (விண்ணகப் பயணம்) என்பது நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த மகத்தான அற்புத நிகழ்ச்சியாகும். உலக வரலாற்றின் ஓட் டத்தையே பிடித்து நிறுத்திய ஒப்பற்ற நிகழ்வு களில் இதுவும் ஒன்றாகும். நபி(ஸல்)அவர்களது இஸ்லாமியப் பிரச்சார இயக்கத்தின் மறுமலர்ச் சிக்கும், மகத்தான மாற்றத்திற்கும் இந்நிகழ்ச்சி முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம்.
அரபியில் ‘இஸ்ரா’ என்பது இரவில் பயணம் செய்வதைக் குறிக்கும். ‘அல் இஸ்ரா’ என்பது நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவில் ஜிப்றீல்(அலை) அவர்கள் மூலமாக மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.
மேலும் படிக்க

பள்ளிவாசலில் பெண்கள் மத்ஹப் நூல்களிலிருந்து…

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்களான அபூயூசுஃப், முஹம்மது ஆகியோரின் கூற்றுப்படி வாலிபப் பெண்கள் ஜமாஅத் தொழுகைக்கு வருவது பொதுவாக வெறுக்கத்தக்கதாகும். விரும்பத்தகாத ஏதும் நிகழ்ந்து விடுவது பற்றிய அச்சத்தையே அவர்கள் காரணமாகக் கூறுகின்றனர்.
அதே சமயம் முதிய பெண்மணி ஃபஜ்ர், மக்ரிப் மற்றும் இஷா ஆகிய தொழுகைகளில் கலந்து கொள்வதை இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் குறைகாணவில்லை.
மாலிக்கி மத்ஹப் அறிஞர்கள் கூற்றுப்படி, ஆண்களின் இச்சைக்கு ஆளாகும் பருவத்தை தாண்டிய பெண்கள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருவது ஆகுமானதே! அதே போல் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வாலிபப் பெண் வருவதும் ஆகுமானதே! விரும்பத்தகாத பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படும் பெண்மணி பொதுவாக (எந்த வயதாக இருந்தாலும்) வரக் கூடாது.
மேலும் படிக்க

பள்ளிவாசலில் பெண்களா?

பள்ளிவாசலுக்கு பெண்கள் வரலாமா? கூடாதா? என்பது ஏதோ மார்க்க சட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட தலைப்பல்ல! சமூகத்தின் மிக முக்கியமான ஒரு பாடம். பள்ளிவாசலுக்கு பெண்கள் வந்தே ஆகவேண்டும என்போர் முன்வைக்கின்ற காரணங்களையும் பள்ளிவாசலில் பெண்களை அனுமதிக்கவே மாட்டோம் என்போர் சுட்டுகின்ற வாதங்களையும் இந்தக் கட்டுரை அலசுகின்றது. கூடுமா? கூடாதா? என்னும் ரீதியில் சடங்குப் போக்கில் எப்பிரச்சனையையும் ஆராயாமல் அனைத்துக் கோணங்களையும் உள்ளடக்கி ரீஅத்தின் தீர்வை எட்டுவதற்கு இக்கட்டுரை பயனளிக்கும் என்று நம்புகிறோம். மேலும் படிக்க

Friday, November 5, 2010

மருத்துவ துறையின் விபரீதங்கள்

கொடிய விச வாயு கசிந்து சுற்றுப்புற அப்பாவி மக்களை பலி கொண்ட வேளையிலும், அரசு மக்கள் நலனுக்கு சாதகமாகச் செயல்படாமல் அமெரிக்க தொழில் நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டது எவ்வளவு அரக்கத்தனமான செயல். இந்தகிரிமினல் குற்றத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு அதிகாரிகள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மீது கிரிமினல் குற்றத்தின் கீழ் தண்டிக்க ???? என்னதான் உள்ளது? யார்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்-? என்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நேரம் இது!
மேலும் படிக்க

போபால்: அநீதி இழைக்கப்பட்ட அப்பாவி மக்களின் கதை

போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களின் சோக வரலாற்றையும் அதற்கு காரணமாக இருக்கும் அரசு பயங்கரவாதத்தையும் இங்கே தோலுரித்துக் காட்டுகிறார் மருத்துவர் புகழேந்தி. கல்பாக்கம் பகுதியில் ஏழை எளிய மக்களிடையே மருத்துவச் சேவை செய்து வருபவர். தொழில் கூடங்களின் செயல்பாடு மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பல்வேறு தளங்களில் போராடி வரும் போராளியாகவும் விளங்குகிறார் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் புகழேந்திமேலும் படிக்க

போபால் துயரம்

போபால் விஷவாயு தாக்குதலில் 26 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியான துயரம் உலகிலேயே இதுவரை எங்கும் நடந்திடாத ஒன்று.
20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய கோர அழிவு என்றால் அது போபால் விஷவாயு தாக்குதலாகும். போபால் விஷவாயு தாக்குதல் துயரம் இருபதாம் நூற்றாண்டின் மூன்று சோக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் தகுதி வாய்ந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் அமெரிக்க வான்படை விமானங்கள் வீசிய அணுகுண்டு வீச்சுக்கு அடுத்த படியாக போபால் விஷவாயு தாக்குதல் இரண்டாம் இடம் பெறுகிறது.
ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வீச்சுக்கு அடுத்தபடியாக போபால் விஷவாயு சம்பவமும் ரஷ்யாவின் செர்ணோபில் அணுக் கரு உலை விபத்து மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன.
மேலும் படிக்க

போபால் விபரீதமும் & சுற்றுச்சூழல் பாதுகாப்பும்

போபால் விஷ வாயு வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நாட்டில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலி வாங்கிய யூனியன் கார்பைட் நிறுவனத்தின் விஷவாயு ஒரு சாதாரண சாலை விபத்து வழக்குப் போல் கருதப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது நெஞ்சை உலுக்கும் கொடுஞ் செயலாக அமைந்துள்ளது. இனி ஒரு அணு உலையில் இருந்து கதீர்வீச்சு ஏற்பட்டு அதனால் மனிதர்கள் உயிர் இழந்தால் அதுவும் ஒரு சாலை விபத்துப் போல் கருதப்படும் நிலை இந்த தீர்ப்பினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு பெரும் ஆபத்தாக விளங்கும் இந்த பாதகச் செயல்கள் குறித்து நாம் பாராமுகமாக இருக்க இயலாது. நாம் வாழும் பூவுலகை காப்பாற்றுவது நமது இன்றியமையாத கடமையாகும். எனவே தான் பூவுலகின் சுற்றுச் சூழலை பாதுகாக்க ஏராளமான வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை புறக்கணித்து வரம்பு மீறி வாழ்ந்தவர்களின் கதி என்னவானது என்பது குறித்தும் திருக்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கின்றது:
மேலும் படிக்க

காய்கள் கனியட்டும்! கனவுகள் மலரட்டும்!

‘சமுதாய ஒற்றுமை’ ஓசையை நோக்கி தாயிடம் பாயும் சேயாய் உள்ளங்கள் விரைகின்றன. ஒற்றுமையை நிலைநாட்ட உணர்வுகள் துடிக்கின்றன.
கண்ணியமும் உயர்வும் பாதுகாப்பும் சமுதாய ஒற்றுமையின் நிழலில்தான் கிடைக்கும் என்ற வரலாற்றுச் சுவடுகள் சமுதாய ஒற்றுமையை வாழ்வின் இலட்சியமாக்கின.
முஸ்லிம் சமுதாயத்திடையே நீண்ட காலமாக ஏற்பட்ட பிளவும் பிரிவினையும் சமுதாய பலத்தை குன்றச் செய்தன, எதிரிகள் அதன் மீது ஆதிக்கம் செலுத்த பாதை அமைத்தன என்பதை முஸ்லிம்கள் மறக்கவில்லை.
மார்க்கச் சட்டங்களை சமூகப் பிளவுக்கு காரணமாக்கி எதிரிகள் வெளியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, ஏகத்துவக் கொள்கை முஸ்லிம் சமுதாயத்தை கூறு போட்டே தீரும் என உட்புறத்திலிருந்து சில தீய குரல்களும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
மேலும் படிக்க

வாழ்க்கை ஓர் அமானிதம்

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் -& மனிதர்களில் எல்லா சாராருக்கும் மூன்று வகையான வாழ்க்கையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

கடவுளை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும், ஏற்றுக் கொண்டவர்களில் கூட ஒரே கடவுள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் பல கடவுளர்கள் என்று ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் அனைத்து வகை மனிதர்களுக்குமே மூன்று வகையான வாழ்க்கையை இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.
அதிலொன்று & நாம் இன்று வாழ்ந்து கொண் டிருக்கக் கூடிய ‘துன்யா’ எனும் இவ்வுலக வாழ்க்கை. இது அற்ப வாழ்க்கை.


மேலும் படிக்க