Monday, November 29, 2010
சுன்னாவின் ஒளியில் பெருநாள்
அரபு மொழியில் பெருநாள் என்பதற்கு ‘ஈத்’ என்று சொல்லப்படும். உண்மையில் ஈத் என்றால் திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும். பெருநாள் ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, மதீனாவாசிகள் ஜாஹிலிய்யாக் கால இரு பெருநாட்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதற்குப்பதிலாக அவற்றை விடச்சிறந்த இரண்டு பெருநாட்களை அல்லாஹ் உங்க ளுக்குத் தந்துள்ளான். அவை & ஒன்று அறுத்துப் பலியிடும் நாளாகிய (ஈதுல் அழ்ஹா), மற்றையது ஈதுல் பித்ர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸஈ இந்த வகையில் ரமலான் முழுக்க நோன்பு நோற்ற பின் ஷவ்வால் மாதம் முதல்பிறை பார்த்ததும் கொண் டாடப்படும் பெருநாள் ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளாகும். இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பலியிட முன் வந்ததை நினைவு கூறும் விதமாக துல்ஹஜ் மாதம் பிறை 10ல் கொண்டாடப்படும் பெருநாளே ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளாகும். சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி வெள்ளிக் கிழமை தினமும் ஒரு பெருநாளாகும். இவை தவிர வேறு எந்தப் பெருநாட்களும் இஸ்லாத்தில் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும். பெருநாளைக் கொண்டாடுவது எப்படி—? பெருநாட்களை அடையாளப்படுத்திய நபி (ஸல்) அவர்கள், அவற்றை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கான வழிகளையும் காட்டியுள்ளார்கள். புத்தாடை மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment