பிறை ஒரு பிரச்சனையா? - பல அறிஞர்களின் கருத்துக்கள்
- பிறையை பார்த்தே முடிவெடுக்க வேண்டும் ஏ.இ. அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் (தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபைத் தலைவர்)
- ‘‘பிறை பார்த்த தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்க வேண்டும்’’ எஸ். கமாலுத்தீன் மதனீ (மாநிலத் தலைவர், ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்)
- ‘‘சமூக ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும்’’ டாக்டர். ஆர்.கே நூர் மதனீ (இயக்குனர், இப்னுல் கைய்யூம் இஸ்லாமிய ஆய்வுக் கூடம், சென்னை)
- தலைமை காஜியின் அறிவிப்பை ஏற்பதே சமூக ஒற்றுமைக்கு உகந்தது! முஃப்தி உஸ்மான் ஹஜ்ரத் (வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி தலைமை முஃப்தி)
- ‘‘கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்!’’ முனைவர். அப்துல்லாஹ் ஜோலம் உமரி மதனீ (முதல்வர், ஜாமிஆ தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரி, உமராபாத்)
- சந்திரக் கணக்கே சரியானது! அலி மனிக்ஃபான் (விண்ணியல் ஆய்வாளர், பிறையியல் நிபுணர்)
- ‘‘பிறையால் ஏற்படும் சமூகக் குழப்பம் தவிர்க்கப்பட வேண்டும்!’’ மௌலவி முஹம்மது கான் பாக்கவி (தலைமை எடிட்டர், ரஹ்மத் அறக்கட்டளை, சென்னை)
- பெருநாளில் பிளவுகள் வேண்டாம் - இணைந்தே கொண்டாடுவோம்! அப்துல் லத்தீஃப் உமரி (ஜித்தா)
- ‘‘ஒற்றுமையில்தான் சமூகப் பாதுகாப்பு!’’ ஹஜ்ரத் இக்பால் காஸிமீ (முதல்வர், வேலு£ர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்)
- ‘‘பிறை பற்றி மறுமை நாளில் நான் விசாரிக்கப்படுவேன் என்ற பொறுப்புணர்வு எனக்குண்டு!’’ டாக்டர். முஃப்தீ காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப், (தமிழக அரசு தலைமை காஜி, சென்னை)
- பிழையில்லா பிறைக் காலண்டர் வரும் வரை அரசு காஜியின் அறிவிப்பையே ஏற்க வேண்டும்! மௌலவி எஸ். கே. சம்சுதீன் (குவைத்) தொழிலதிபர்
பிறையைப் பார்த்து நோன்பு நோற்று பிறையைப் பார்த்து நோன்பை விடுவதே தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் நிலைபாடு! இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை! ஜமாஅத்துல் உலமா சபைக்கும் அரசு தலைமை காஜிக்கும் நெருங்கிய உறவு உள்ளது. இரு தரப்பும் இணைந்தே பிறை தொடர்பாக முடிவெடுக்கின்றோம்.
ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவராக செயல்பட்டுவருபவருக்கு பிறைபற்றி தகவலை தெரிவிக்கும் பொறுப்பு ஜமாஅத்தால் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் அனுப்பும் தகவலை பரிசீலித்த பிறகு, அதனை தலைமை காஜிக்கு தெரிவிக்கின்றோம். அவர்கள் அதனை மக்களுக்கு அறிவிக்கின்றார்கள்.
பிறை விஷயத்தில் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டியுள்ளது. பல பகுதிகளிலிருந்தும் தொலை பேசிகளில் வரும் தகவல்களை அங்குள்ள பொறுப்பாளர்களைக் கொண்டு உறுதி செய்ய வேண்டி யுள்ளது. சில சமயங்களில் பிறை அறிவிப்பு கால தாமதமாவதற்கு இதுவே காரணம்.
இந்த வருடம் ஷஅபான் பிறை பார்க்கப்பட்டு ஜூலை 27ம் தேதி ஷஅபான் பிறை 15 என்று ஜமாஅத்துல் உலமா சபை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் இம்மாத இறுதியில் இரவு 9 மணிக்குள் ரமளான் பிறை பற்றி அறிவிப்புச் செய்யும் முயற்சியில் உள்ளோம்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment